மேலும் அறிய

மஹாளய அமாவாசை- நாளை முதல் 2 நாட்களுக்கு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை

’’நாளை  மகாளய அமாவாசை என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை'’

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ராமேஸ்வரம் ராமநாதசாமி  கோவிலில்  வெள்ளிக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையிலும் 3 நாட்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கோவில் தீர்த்த கிணறுகளில்  பக்தர்கள் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பக்தர்கள் செல்லாதவாறு  போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,  கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிகப்பட்டிருந்த நிலையில்.,  இன்று  வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 


மஹாளய அமாவாசை- நாளை முதல் 2 நாட்களுக்கு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு எடுத்து வரும்  பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் தமிழக கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால்,  கடந்த 3 நாட்களாக இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில்  பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தது.,  இந்த நிலையில் திங்கள் கிழமையான இன்று வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். மூன்று நாட்களுக்கு பின் இன்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்ததால் இன்று காலை முதல் ஆயிரகணக்காண பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில்; நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளை  மகாளய அமாவாசை என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


மஹாளய அமாவாசை- நாளை முதல் 2 நாட்களுக்கு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை

திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட தடை நீடித்து வருவதால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும் வார விடுமுறை என்பதால் அதிக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மாவட்ட நிர்வாகத்தால்  பக்தர்கள் நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கபட்டது. கடந்த 3 நாட்களாக சுவாமி தரிசனம் செய்ய வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் கோயில் நுழைவாயிலுக்கு எதிரே நின்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இந்நிலையில், இன்று காலை முதல் பக்தர்கள் நேரடியாக சுவாமி தரிசனம் செய்யலாம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்தையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரகணக்கான பக்தர்கள்  திருக்கோயில் வளாகத்திற்கு எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி,முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து தர்பணம் கொடுத்தனர். அதனை தொடர்ந்து கூட்ட நெரிசல் அதிகமானதால் திருக்கோவில்; வளாகத்தை சுற்றி  பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பின்  திருக்கோவிலுக்குள் சென்று பல மணி நேர காத்திருப்பிற்கு பின் சுவாமி தரிசனம் செய்தனர்.

மஹாளய அமாவாசை- நாளை முதல் 2 நாட்களுக்கு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை
மேலும், ராமேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய  தீர்த்த கிணறுகளில் புனித நீராட கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு தடை விதித்தது. இதனால் ராமேஸ்வரம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மகாளய அமாவாசை என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் நாளை முதல் இரண்டு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடதக்கது.

தலைப்பு செய்திகள்

ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
மதுரை மாவட்ட புதிய உதவி ஆட்சியர்... யார் இந்த சித்தார்த் போகர்னா - முழு விவரம் !
மதுரை மாவட்ட புதிய உதவி ஆட்சியர்... அகில இந்திய அளவில் 216-வது இடம் பிடித்த சித்தார்த் போகர்னா !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் நாளை (05.06.26) மற்றும் நாளை மறுநாள் மின்தடை... வெளியானது முழு லிஸ்ட் !
மதுரையில் நாளை (05.06.26) மற்றும் நாளை மறுநாள் மின்தடை... வெளியானது முழு லிஸ்ட் !

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
Annamalai Politics : அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
Embed widget