மேலும் அறிய

பா.ம.க திசைமாறி தலித்துகளுக்கு எதிரான வன்மைத்தை உமிழ்வது வேதனைக்குரியது - சிந்தனைச் செல்வன்

வி.சி.க., பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் தலைமையில் பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் புல்லட்டில் சென்றபடி  பங்கேற்பு.

சிவகங்கையில் புல்லட் ஒட்டியதாக கூறி பட்டியிலன கல்லூரி மாணவர் தாக்கப்பட்டத்தை கண்டித்து வி.சி.க., சார்பில் மதுரை காந்திமியூசியம் சாலையில் புல்லட் பேரணி நடைபெற்றது.
 
பட்டியலின கல்லூரி மாணவன் மீது தாக்குதல்
 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த  அய்யாசாமி (19) என்ற பட்டியலின கல்லூரி மாணவனை கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் ஆயுதங்களால் தாக்கி கைகளில் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் அய்யாசாமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்குதல் நடத்திய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து  17ஆம் தேதியன்று தேசிய SC/ ST ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.
 
புல்லட் ஓட்டியபடி பேரணியில் கலந்துகொண்டனர்
 
இந்நிலையில் கிராமத்திற்குள் புல்லட் ஓட்டியதால் பட்டியலின கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய நிலையில் மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்ற பகுதியிலிருந்து காந்தி அருங்காட்சியகம் வரை சமத்துவ புல்லட் பேரணி நடைபெற்றது. இதில்  காட்டுமன்னார்கோவில் வி.சி.க சட்டமன்ற உறுப்பினரும், பொதுச்செயலாளருமான சிந்தனை செல்வன் பேரணியை தொடங்கிவைத்து புல்லட் ஓட்டியபடி பேரணியில் கலந்துகொண்டனர். இந்த பேரணியில் பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் புல்லட் ஓட்டியபடி கலந்துகொண்டு கல்லூரி மாணவன் தாக்கப்பட்டதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். புல்லட்டில் கல்லூரிக்குச் சென்ற மாணவனின் கையை வெட்டியுள்ளனர். இதற்கு எதிராக அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்ட சமூக நீதிப் புல்லட் பேரணி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களும் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் சமத்துவ சிந்தனையோடு நடந்து கொள்வதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து பிரச்னைகளையும் வரட்டுத்தனமாக சட்ட ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே பார்க்கும் நிலை உருவாகும்.
 
அன்புமணி கூறிய கூற்று நம்பிக்கை அளிக்கிறது ஆனால் 
 
விசிக கொடி கம்பம் தாக்கப்பட்டது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சிந்தனை செல்வன்..,” 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒற்றுமையைபெற முழங்கியது பா.ம.க., இன்று திசைமாறி தலித்துகளுக்கு எதிரான வன்மைத்தை உமிழ்வது வேதனைக்குரியது. விசிக கொடி தாக்குதல் தொடர்பாக பாமகவினருக்கு அன்புமணி கூறிய கூற்று நம்பிக்கை அளிக்கிறது என்றாலும், வெளிப்படையாக அதற்கான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும். பாமக தலைவர் ராமதாஸ் அவரது தோட்டத்தில் காரல் மார்க்ஸ், அம்பேத்கர், தந்தை பெரியாரின் சிலைகளை வைத்துள்ளார். அவைகள் அடையாள அரசியலாக இல்லாமல் அடித்தட்டு மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துகிற அரசியலாக அமைய வேண்டும்" என்றார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death
”மனசு நொறுங்கி போச்சு SK-விடம் மன்னிப்பு கேட்டேன்” நடிகர் அமீர்கான் உருக்கம் | Amir Khan Apology to Sivakarthikeyan
காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
திருப்புவனம் இளைஞர் மரணம்: நீதிபதி நேரில் விசாரணை! அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
திருப்புவனம் இளைஞர் மரணம்: நீதிபதி நேரில் விசாரணை! அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
Trump's New Bill: என்னது, 500% வரியா.?! ட்ரம்ப்பின் முடிவால் இந்தியாவுக்கு ஆப்பு - இதெல்லாம் அடுக்குமா சாரே.?!!
என்னது, 500% வரியா.?! ட்ரம்ப்பின் முடிவால் இந்தியாவுக்கு ஆப்பு - இதெல்லாம் அடுக்குமா சாரே.?!!
மேகதாது அணை: கர்நாடகா அதிரடி! தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தீவிரம்!
மேகதாது அணை: கர்நாடகா அதிரடி! தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தீவிரம்!
1 லட்சம் பேருக்கு வேலை! விருதுநகரில் மெகா ஜவுளிப்பூங்கா - ரூ.1894 காேடியை ஒதுக்கிய மத்திய அரசு
1 லட்சம் பேருக்கு வேலை! விருதுநகரில் மெகா ஜவுளிப்பூங்கா - ரூ.1894 காேடியை ஒதுக்கிய மத்திய அரசு
Embed widget