மேலும் அறிய

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்னைக்கு போராட்டம் நடத்த தயார் - எச்சரிக்கும் ஆர்.பி உதயகுமார்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின்  விரோதபோக்கை திமுக அரசு தொடர்ந்தால் எடப்பாடியார்  தலைமையில் 5 மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் - ஆர்.பி.உதயகுமார்

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான  ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின்  விரோதபோக்கை தி.மு.க., அரசுதொடர்ந்தால் எடப்பாடியார்  தலைமையில் 5 மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்”. என தெரிவித்துள்ளார்.

 
வீடியோவில் பேசியுள்ளது..”முல்லைப் பெரியார் அணையில் 137.50 அடியாக அதிகரித்து வரும் வேளையில்,  கடந்த 5-ம் தேதி இடுக்கி அணைக்கு செல்லும் விதமாக, வினாடிக்கு 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் திறந்து விட்டனர். இதனால் தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.  ரூட் கர்வ் மூலம் திறந்து விட வேண்டும் என்று கேரள முதலமைச்சர், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் மூன்று மதங்கள் மூலம் திறந்துள்ளார்கள். இதன் மூலம் 5 மாவட்ட விவசாயிகள் வயிற்றில் அடித்து கொடுமையான சம்பவத்தை  தி.மு.க., அரசு நிகழ்த்தியுள்ளது. 
 
Theni: Detailed project report ready for construction of new dam in Mullaperiyar... Controversy due to Kerala Minister's facebook post
 
விவசாயிகளின் இரண்டு ஆண்டு கால  நம்பிக்கை தி.மு.க., அரசு சீர்குலைத்துள்ளது. இதனால் குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்படும்,  தமிழக அரசின் சார்பில் சிறப்பு அதிகாரி  ஒருவரை நியமிக்க வேண்டும் என்பன வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி, முல்லைப் பெரியார் அணையில் இருந்து இடுக்கி அணைக்கு கேரள அரசின் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது, அதை கேரள அமைச்சர் ரோசி அகஸ்டின் அணைக்குச் செல்லாமல் வல்லக்கடவு பகுதியில் தண்ணீர் திறப்பை பார்வையிட்டார்.
 
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்னைக்கு போராட்டம் நடத்த தயார் - எச்சரிக்கும் ஆர்.பி உதயகுமார்
 
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி, அதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் மூலம் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம், பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக  உயர்த்தி கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்தார்கள். அம்மா முதலமைச்சர் இருந்த போதும், எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போதும், மூன்று முறை முல்லை பெரியார் அணைநீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தப்பட்டது. எடப்பாடியார் தற்பொழுது முதலமைச்சர் இருந்திருந்தால், அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி காட்டி இருப்பார் என்று விவசாயிகள் மத்தியில் பேசி வருகின்றனர். தற்போது தி.மு.க., அரசு கேரளா அழுத்தத்தை தூக்கி ஏறிந்து, மக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்.
 

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்னைக்கு போராட்டம் நடத்த தயார் - எச்சரிக்கும் ஆர்.பி உதயகுமார்
 
கேரளா முதலமைச்சர் வியாழக்கிழமை கடிதம் எழுதுகிறார், அதற்கு வெள்ளிக்கிழமை பேசி வைத்த நாடகம் போல், விடியா தி.மு.க., அரசு தண்ணீரை திறக்கிறது. கேரளா அழுத்தத்திற்கு அடிபணிய கூடாது, என்பதை விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர். விவசாயிகளின் இந்த பிறப்புரிமையை தமிழக அரசு காக்க முன்வர வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியை உயர்த்தாமல் உரிமை காக்க தவறி விவசாயிகளை தி.மு.க., அரசு நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளது. கடிதத்திற்கு அடுத்த நாள் தண்ணீர் திறந்து விட்டது கடும் கண்டனத்துக்குரியது. 
 

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்னைக்கு போராட்டம் நடத்த தயார் - எச்சரிக்கும் ஆர்.பி உதயகுமார்
 
தமிழக அரசு  தமிழக விவசாயிகளை பாதிக்கும், ரூட் கர்வ்யை  மாபெரும் சட்ட போராட்டத்தை தொடர்ந்து மக்களை உரிமையை காத்திருக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின்  விரோதபோக்கை, தி.மு.க., அரசு தொடருமேயானால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அனுமதியை பெற்று, எடப்பாடியார்  தலைமையில், ஐந்து மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்" என தெரிவித்துள்ளார்.

 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
India UK FTA: இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?
கொளுத்திப் போட்ட டிரம்ப்
”சென்னைக்கு வாங்க வருண்”ஸ்டாலின் போடும் MASTERPLAN! டார்கெட் தவெக விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
India UK FTA: இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
யப்பா, ஒரே ஜம்ப் தான்; 2-ல் இருந்து நேராக 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு தாவிய கார் எது தெரியுமா.?
யப்பா, ஒரே ஜம்ப் தான்; 2-ல் இருந்து நேராக 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு தாவிய கார் எது தெரியுமா.?
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
Embed widget