மதுரையில் பல லட்சம் மதிப்புள்ள பொங்கல் இலவச வேட்டி சேலைகள் தீயில் கருகி சேதம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார வழங்கல் அலுவலத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பல லட்சம் மதிப்புள்ள பொங்கல் இலவச வேட்டி சேலைகள் தீயில் கருகி சேதம்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் (நுகர்பொருள்) அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவுள்ள 50 ஆயிரம் இலவச வேட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் தீ விபத்து !
— arunchinna (@arunreporter92) January 9, 2023
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்ப இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேட்டி- சேலை பண்டல்கள், கம்ப்யூட்டர், ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.@SRajaJourno | #Madurai pic.twitter.com/ves1Ny6lIf

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















