மேலும் அறிய

“மதுரை தெப்பக்குளத்தில் சிலைகளை காணோம்” - ஆட்சியரிடம் பரபரப்பு புகார்

மாநகராட்சிக்கு சம்பந்தம் இல்லாத பகுதிகளில் மாநகராட்சி பெயரைக் கூறி சிலர் வசூலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினர்.

"மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பழமையான கற்சிற்பங்களை காணவில்லை" எனக்கூறி வழக்கறிஞர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கோயில் தெப்பக்குளத்தில்  அசைவ உணவுகளின் கழிவு குப்பைகளை கொட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
 

மதுரை மக்கள் விரும்பும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்

மதுரையின் முக்கிய சுற்றுலாதலமாக உள்ள வண்டியூர் மாரியம்மன தெப்பக்குளம் சுமார் 16 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் தெப்பக்குளத்தை சுற்றிலும் பள்ளி, கல்லூரி, கோயில்கள், மண்டபங்கள் உள்ளதால் தெப்பக்குளத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் கடந்து செல்கின்றனர்.  இதே போன்று காலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த தெப்பக்குளத்தில் நீர் நிரம்பியுள்ளதால் இதில் மீன்கள் குத்தகைக்கு விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இங்கு அவ்வப்போது 400 கிலோவிற்கு மேல் மீன்கள் பிடித்து குத்தகைதாரர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை வைகை ஆற்றுப்பகுதியில் இருந்து தெப்பக்குளத்திற்கு நேரடியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் தெப்பக்குளத்தை காண்பதற்காகவும் தெப்பக்குளத்தை சுற்றி நடைபயிற்சி மேற்கொள்வதற்காகவும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.
 
 

அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தெப்பக்குளம் பகுதியில் கற்சிலைகள் காணவில்லை

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தெப்பக்குளம் கோயிலை சுற்றிலும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பகுதியாக உள்ள தெப்பக்குளம் பகுதி முழுவதிலும் அதிக அளவிற்கு சாலையோர கடைகள் உருவாகியுள்ளதாகவும், இதனால் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தெப்பக்குளம் பகுதியில் சுற்றி இருந்த பழமையான பல்வேறு கற்சிலைகள் காணாமல் போனதாகவும் கூறி மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற வழக்கறிஞர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்தார்.

மாநகராட்சி பெயரைச் சொல்லி வசூல் வேட்டை

இதுதொடர்பாக பேசிய முத்துக்குமார், “தெப்பக்குளம் பகுதியை சுற்றிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சி அனுமதியின் பெயரில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தெப்பக்குளத்தை சுற்றி இருந்த பழமையான கற்சிலைகள் காணாமல் போகின்றதோடு, சேதமடைந்து கிடக்கிறது. கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் அசைவ உணவுகளின் குப்பைகளை தெப்பக்குளத்தில் வீசி செல்கின்றனர். இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் மனு அளித்துள்ளேன். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன்” என்று தெரிவித்தார்”. மேலும் மாநகராட்சிக்கு சம்பந்தம் இல்லாத பகுதிகளில் மாநகராட்சி பெயரைக் கூறி சிலர் வசூலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினர்.
 
 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget