மேலும் அறிய

Madurai: நெற்பயிருக்கான இழப்பீட்டு தொகை வழங்கவில்லை; அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்த விவசாயி

முன்னாள் விவசாய சங்க நிர்வாகியின் மறைவுக்கு குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் விவசாய சங்க நிர்வாகியின் மறைவுக்கு குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
 
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, விக்கிரமங்கலம், கள்ளிக்குடி, வாடிப்பட்டி, கள்ளந்திரி, புளியங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் மனுக்கள் மற்றும் கடிதங்களுக்கு வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு பதில் அளித்தனர். முன்னதாக கூட்டம் தொடங்கியவுடன் மதுரை மாவட்டம் வெள்ளரிபட்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் பெரியார் பாசன விவசாய சங்கத்தின் நிர்வாகியும், முன்னாள் இந்திய கால்பந்தாட்ட அணியின் வீரருமான ராஜமாணிக்கம் என்பவரின் மறைவுக்கு மதுரை விவசாய குறைதீர் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில்  விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் மௌனஅஞ்சலி செலுத்தினர்.

Madurai: நெற்பயிருக்கான இழப்பீட்டு தொகை வழங்கவில்லை;  அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்த விவசாயி
 
 
இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கான கடன் அட்டை வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்த பொழுது தங்களுக்கு கடன் அட்டை கிடைப்பதில்லை எனவும் மதுரை மாவட்டத்தில் பாதி விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் கிடைப்பதில்லை எனவும், கடன் அட்டை முகாம்கள் குறித்து யாருக்கும் தெரியவில்லை என குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பெரியார் மற்றும் வைகை பாசன பகுதிகளுக்கு ஒருபோகம் மற்றும் இரு போகங்களுக்கான தண்ணீரை திறந்து விட வேண்டும் என இரு தரப்பு விவசாயிகள் கோரிக்கை எழுப்பினர். அப்போது இன்னும் ஒரு வாரத்திற்குள் மழை பெய்யுமா என பார்த்த பின்பு தண்ணீர் திறப்பது குறித்து உரிய வழிகாட்டுதல் படி தண்ணீர் திறக்கப்படும் எனவும், மேலும் தற்பொழுது தண்ணீர் திறக்கப்பட்டால் 20 நாட்களுக்கு தேவையான தண்ணீர் மட்டுமே இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனிடையே பேசிய விவசாயிகள் தங்கள் பகுதிகளுக்கு மானாவாரி பயிர்களை தேக்கிவைக்க அரசு குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டி அரசுக்கு ஆட்சித்தலைவர் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் தனியார் மூலமாக குளிர்பதனை கிடங்க அமைப்பது என்பது சிரமம் உள்ளதாக தெரிவித்தனர்.

Madurai: நெற்பயிருக்கான இழப்பீட்டு தொகை வழங்கவில்லை;  அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்த விவசாயி
 
இக்கூட்டத்தில் மதுரை மாங்குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்திற்கான நெற்பயிர் பயிர்வித்தும் மழை இல்லாததால் விளைச்சல் இல்லாமல் போனதால் நெற்பயிருக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டபோது, வரைமுறைக்கு உட்பட்டு உங்களது விவசாய நிலம் இல்லை என விளக்கமளித்தார். இதனால், ஆத்திரமடைந்த விவசாயி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து மாவட்ட ஆட்சியர் முன்பாக அரசுக்கு எதிராக முக்காடு போட்டபடி முழக்கம் எழுப்பினார். பின்னர் அரசை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் தரப்பில் மாவட்ட ஆட்சியரிடமும். வேளாண்துறை அதிகாரிகளுடமும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

TN Police vs TNSTC : காவல்துறை vs போக்குவரத்து துறைவலுக்கும் மோதல்? ’’பழிக்குப்பழியா?’’Prashant Kishor Angry : ’’வீடியோ ஆதாரம் இருக்கா?’’பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!வாக்குவாதமான நேர்காணல்Arvind Kejriwal : ’’முதல்வர் பதவி ராஜினாமா?’’கெஜ்ரிவால் சொன்ன SECRET!பாஜகவுக்கு செக்!TN Cabinet Shuffle :முதல்வரின் மேஜையில் ரிப்போர்ட்..கலக்கத்தில் 3 அமைச்சர்கள்! பரபரக்கும் அறிவாலயம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
Embed widget