மேலும் அறிய

மதுரையில் தொழிலாளர் மண்சரிவில் உயிரிழந்த விவகாரம் - 3 பேர் மீது வழக்குப்பதிவு

சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் தொழிலாளருக்கான உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

மதுரை மாநகராட்சி பாதாள சாக்கடை பணியானது விரிவாக்கம் செய்யப்பட்ட 28 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிக்கு ரூ.500 கோடிக்கு நிதி ஒதுக்கி பாதாள சாக்கடை திட்டம் பணிகள் 28 வார்டுகளிலும் நடைபெற்று வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மதுரை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரக்கூடிய நிலையில் மதுரை மாநகராட்சி 2-வது வார்டு அசோக்நகர் 2ஆவது தெரு பகுதியில் பாதாளசாக்கடை தோண்டும் பணி நடைபெற்று வந்தது.

மதுரையில் தொழிலாளர் மண்சரிவில் உயிரிழந்த விவகாரம் - 3 பேர் மீது வழக்குப்பதிவு
 
இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் 5 ஊழியர்களுடன் நடைபெற்று வந்த பணியின் போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொத்துக்காடு பகுதியை சேர்ந்த  சக்திவேல் என்ற தொழிலாளி 16 அடி ஆழத்தில் உள்ள குழிக்குள் இறங்கி வேலை பார்த்தபோது திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது . அப்போது அவருடன் இருந்த மற்றொரு தொழிலாளரும் சிக்கிய நிலையில் இடுப்பளவு மண்ணில் சிக்கியுள்ளனர். இதனையடுத்து சக தொழிலாளி தானாக மண்ணை தோண்டி வெளியில் வந்த நிலையில் சக்திவேல் தனது இடுப்பில் இருந்த மண்ணை அகற்ற முயன்றுள்ளார். மேலும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்க முயன்றுள்ளனர். ஆனால் பாதாளசாக்கடை பள்ளத்தின் அருகிலேயே இருந்த பெரிய அளவிலான குடிநீர் இணைப்பு குழாயும் உடைந்து தண்ணீர் பள்ளத்திற்குள் புகுந்தது. இதனையடுத்து சிறிதுநேரத்திலயே தொழிலாளியின் உடல் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியதோடு மண் சரிவில் புதைந்தது. இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியேற்றிய பின் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் பொக்லென் இயந்திரத்தின் மூலமாக உடலில் கயிறு கட்டி மீட்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடலானது அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக கொண்டுசெல்லப்பட்டது. உயிரிழந்த சக்திவேலுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் என இரண்டு குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.

மதுரையில் தொழிலாளர் மண்சரிவில் உயிரிழந்த விவகாரம் - 3 பேர் மீது வழக்குப்பதிவு
 
இந்நிலையில் தொழிலாளர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக  சக்திவேலின் சகோதரர் மணிகண்டன் கூடல்புதூர் காவல்நிலையத்தில் அளித்தார். இந்த புகாரின் கீழ் பாதாள சாக்கடை இணைப்பு பணிகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்த நிறுவனமான A.K கன்ஸ்டரக்சன் நிறுவனத்தின் உரிமையாளர் அசோகன் , மேலாளர் சுபாஷ்சந்திரபோஸ்,  சூப்பர்வைசர் ரவிக்குமார் ஆகிய 3 பேர் மீது  தொழிலாளர்களை எந்தவித பாதுகாப்பும் இன்றி அஜாக்கிரதையாக பணியில் ஈடுபடுத்தியதாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
மதுரையில் தொழிலாளர் மண்சரிவில் உயிரிழந்த விவகாரம் - 3 பேர் மீது வழக்குப்பதிவு
 
 
இந்த சம்பவம் குறித்து பேசிய மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன், “சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும். தொழிலாளருக்கான உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget