மேலும் அறிய

தஞ்சாவூர் பகுதியில் மதுபான கடை அமைக்க தடை; வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மனுதாரர் கூறியுள்ள இடத்தில் மதுபான கடை அமைப்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை - அரசு தரப்பு

தஞ்சாவூர் மாவட்டம், ஜமீல் நகர் பகுதியில் மதுபான கடை அமைக்க தடை கோரிய வழக்கு முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், வரும் காலத்தில் அந்த பகுதியில் மதுபான கடை அமைக்க அறிவிப்பு வெளியிட்டால் மனுதாரர் புதிய வழக்கு தொடரலாம் என உத்தரவிட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இராஜராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தஞ்சாவூர் மாவட்டம் சத்தியகிருஷ்ண நகர் பகுதியில் இசை பயிற்சி பள்ளி நடத்தி வருகிறேன். அதன் அருகில் ஜமீல் நகர் பகுதியில் கடந்த 3 மாதமாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தில் மதுபானக்கடை அமையுள்ளதாக தெரிவித்தனர். மதுபானக்கடை அமைய உள்ள பகுதிக்கு 100 மீ அருகில் பெண்கள் கல்லூரி மற்றும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது மேலும் பல்வேறு கல்லூரிகள் சுற்றுவட்டாரத்தில் இயங்கிவருகிறது.  

கல்வி நிறுவனம் இருக்கும் பகுதியில் 100 மீட்டருக்குள் மதுபானக்கடை அமைக்க கூடாது என சட்டம் உள்ளது. பெண்கள் கல்லூரி அருகே மதுபானக்கடையை அமைக்க தடை விதிக்க கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மதுபான கடை அமைக்க தடை விதிக்க வேண்டும்." என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் மதுபானக்கடையும் அமைக்க அறிவிப்பு தற்போது வரை இல்லை என தெரிவிக்கப்பட்டது. 

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசு தரப்பு பதிலையேற்று வழக்கை முடித்து வைத்தனர் மேலும் வரும் காலத்தில் அந்த பகுதியில் மதுபான கடை அமைக்க அறிவிப்பு வெளியிட்டால் மனுதாரர் புதிய வழக்கு தொடரலாம் என தெரிவித்தனர்.

 


மற்றொரு வழக்கு

லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் - நீதிபதி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் முறைகேடாக சான்றிதழ் வழங்கிய வழக்கில் முன்னாள் தொலைதூர கல்வி தேர்வு துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி உட்பட 4  நபர்கள் முன் ஜாமீன் கோரிய வழக்கில், நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்  முன்னாள் தொலைதூர கல்வி தேர்வு துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் தொலைதூரக் கல்வி மையம் உரிமையாளர்கள் சுரேஷ், ஜிஜி, ஜெயபிரகாஷ் ஆகியோர் முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குனரகத்தில் முறைகேடாக போலி ஆவணங்கள் தயாரித்து மதிப்பெண் பட்டியல், பாடநெறி நிறைவுச் சான்றிதழ்கள் வழங்கி அரசிற்கு  இழப்பீடு ஏற்படுத்தியதாக 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதில், தங்களுக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் தொலைதூரக் கல்வி மையம் உரிமையாளர்கள் ஜிஜி, சுரேஷ் மற்றும் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நபர்கள் தங்களுக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும்." என மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது

அப்போது நீதிபதி லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கூறி நிபந்தனை விதித்து முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Cadre Fight | மிரட்டல்..கல்வீச்சு..அடிதடி..அத்துமீறிய விசிக பெண் நிர்வாகி பரபரப்பு காட்சிகள்EPS And OPS Meets Modi: தமிழ்நாடு வரும் மோடி! EPS, OPS போடும் ப்ளான்! பாஜக கூட்டணியில் மாற்றம்?Annamalai BJP : அண்ணாமலை பதவி நீக்கம்? சீனுக்கு வந்த நயினார்! ஆட்டம் காட்டும் அமித்ஷாIrfan Controversy | ”அசிங்கமா இல்லையா..” இழிவுபடுத்திய இர்பான்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
IPL PBKS vs LSG: பின்னியெடுத்த பிரப்சிம்ரன்! ஸ்ரேயஸ், நேகல் அமர்க்களம்! லக்னோவை நொங்கெடுத்த பஞ்சாப் வெற்றி!
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
நாளை முக்கியமான நாள்.. சட்டசபையில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்.. என்னவா இருக்கும்?
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
என்னாது நிர்மலா சீதாராமனா? பாஜக தேசிய தலைவர் ரேசில் புது ட்விஸ்ட்.. டிக் அடித்த ஆர்எஸ்எஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
Dhoni Retirement: ஓய்வு பெறுகிறாரா தோனி? பாதியிலே ஐபிஎல்-க்கு பை பை சொல்கிறாரா?
திருச்சிக்கு வரும் Dolby Cinema.. சென்னைக்கு டப் கொடுக்கும் போலயே.. இவ்வளவு வசதிகளா ?
திருச்சிக்கு வரும் Dolby Cinema.. சென்னைக்கு டப் கொடுக்கும் போலயே.. இவ்வளவு வசதிகளா ?
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Siragadikka Aasai: சிறடிக்க ஆசை ஹீரோயின் முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Embed widget