மேலும் அறிய

கிராம மக்கள், மாணவர்களின் பாதுகாப்பில் அரசு அதிகாரிகள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் -  நீதிபதி கருத்து

மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய மேல் நீர் தேக்க தொட்டியின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய  தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்  - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய நீதிமன்றம் நிபுணர்கள் குழு அல்ல. எனவே தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆய்வு அறிக்கை படி அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும்.  
 
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் மிகவும் சேதமடைந்து காணப்படும் நான்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட உத்தரவிட கோரிய வழக்கு.
 
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர்  கலந்தர் ஆசிக் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் வசிக்கும் மக்கள் முழுவதும் விவசாயத்தையே நம்பி உள்ளனர். சுமார் பல்லாயிரக்கணக்கான  மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி நாள்தோறும் 4 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க 4 மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டி குடிநீர். விநியோக செய்யபட்டு  வருகிறது.  இந்த  நீர் தேக்க தொட்டி. கடந்த 99 ஆம்  ஆண்டு கட்டபட்டது தற்போது மிகவும் சேதமடைந்து கீழே இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. தொட்டி கீழே விழும் நிலையில் அருகில் அரசுப்பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளதால் அசாம்பாவித சம்பவங்கள், உயிர்ப்பலிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அபாயகரமான நிலையில் உள்ள 4 மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளை இடித்து புதிய நீர்த் தொட்டிகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
 

கிராம மக்கள், மாணவர்களின் பாதுகாப்பில் அரசு அதிகாரிகள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் -  நீதிபதி கருத்து
 
 
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை செய்யபட்டு இறுதி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இயற்கையாக  அரசு அதிகாரிகள் கிராமமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும். கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து ஆராய்ச்சி செய்ய நீதிமன்றம் நிபுணர்கள் அல்ல. எனவே அரசு அதிகாரிகள் தொழில்நுட்ப நிபுணர்கள் வைத்து நீர்நிலை தொட்டியின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களிடம் இருந்து பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் புரிய முடிவு எடுக்கப்பட வேண்டும். ஒருவேளை உறுதித் தன்மை நன்றாக இருந்தால் நீர் தேக்க தொட்டியை இடிக்க தேவை இல்லை. எனவே தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்து தொட்டிகள் பாதுகாப்பானவை என்று நிபுணர்கள் சான்றளிக்க வேண்டும். இதுவரை நீர் தேக்கத் தொட்டியை தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்யவில்லை என்றால் மூன்று மாதத்தில் ஆய்வு செய்து அறிக்கை பெற வேண்டும் ஆய்வு அறிக்கையின் படி அரசு உரிய முடிவு எடுக்கலாம் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
Embed widget