மேலும் அறிய

கோவிலின் பெயரில் தனிநபர்கள் இணையதளத்தை நடத்துவது தவறு - மதுரை உயர்நீதிமன்றம்

கோவிலின் பெயரில் தனிநபர்கள் இணையதளத்தை நடத்துவது தவறு. ஆகவே அது போன்ற இணையதளங்கள் உடனடியாக முடக்கப்பட வேண்டும்.  

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோவிலின் பெயரில் தனியார் நடத்தும் இணையதளங்களை முடக்கி, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற  மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மிகவும் பிரசித்தி பெற்றது திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அறுபதாம் ஆண்டு திருமணம் உள்ளிட்ட திருமணங்கள் சிறப்பாக நடைபெறும்.  இதற்காக கோவிலை அணுகும், பலர் தவறுதலாக தனியார் இணையதளத்தினை தொடர்பு கொள்கின்றனர்.  கோவில் நிர்வாகம் தரப்பில் 2000 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், தனியார் இணையதளங்கள்  நான்கு லட்சம் ரூபாய் வரை பக்தர்களிடமிருந்து வசூலித்து வருகின்றன. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே ல் அமிர்தகடேஸ்வரர் கோவிலின் பெயரில் உள்ள தனியார் இணையதளங்களை முடக்க  உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, கோவிலின் பெயரில் தனி நபர்கள் இணையதளத்தை நடத்தக் கூடாது. கோவில் இணை ஆணையர் தனியார் நடத்தும் இணையதளங்களை முடக்கவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்கவும் வேண்டும். அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மக்கள் உணர்வை வியாபாரமாக அணுக கூடாது. கோவிலின் பெயரில் தனிநபர்கள் இணையதளத்தை நடத்துவது தவறு. ஆகவே அவை உடனடியாக முடக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு தொடர்பாக திருவானைக்காவல் இணைஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மற்றொரு வழக்கு

மதுரையைச் சேர்ந்த விஸ்வநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் " மதுரை மாவட்டம் ஆரப்பாளையம்  ஞானவொளிபுரம் பகுதி, சர்வே எண் 967 மற்றும் 968 ஆகிய பகுதிகளில் உள்ள 4800 சதுர அடி நிலம், 1950 ஆம் ஆண்டே விளையாட்டு மைதானமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில், அங்கிருக்கும் பொது மக்களுக்கான விளையாட்டு திடல் மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  கடந்த 72 ஆண்டுகளாக அந்த பகுதியில் விளையாட்டு மைதானத்தினை அமைத்து பராமரித்து வரும் நிலையில், அப்பகுதியில் மக்களும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றாமல், அந்த இடத்தில் தற்பொழுது கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். இதனை தடுக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மதுரை ஞானவொளிபுரத்தில் விளையாட்டு மைதானத்திற்காகவென 72 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதிக்க கூடாது எனவும், மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு, 72 ஆண்டுகளாக அந்தப் பகுதி விளையாட்டு மைதானமாக பராமரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடும் நிலையில், அதில் கட்டிடம் கட்டுவது தொடர்பான பிரச்சனை இது முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே இந்த வழக்கு குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும், அதுவரை கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்தியும் வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

 

 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Embed widget