மேலும் அறிய

மரங்களை பாதிக்காதவாறு சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

நெடுஞ்சாலை சார்ந்த பணிகள் மேற்கொள்ளும் போது சாலையோரங்களில் நிற்கும் மரங்கள் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திடும் வகையில் மதுரை கலெக்டர் 8 வாரத்திற்குள் உரிய சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

கடந்த 7.7.2022 அழகர்கோவில் ரோட்டில் டூவீலரில் சென்றபோது சாலையோர மரம் சாய்ந்து விழுந்து எனக்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன் எனது டூவீலரும் சேதமானது நெடுஞ்சாலைத்துறை தரப்பில் சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணி நடந்துள்ளது. இதற்காக முறையற்ற வகையில் பள்ளம் தோண்டியதால் மரம் சாய்ந்துள்ளது இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் எழுத்தராக பணிபுரியும்  பழனிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
 
ஒப்பந்ததாரர் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை  மண் தோண்டப்பட்டதால் பலமிழந்து மரம் சாய்ந்துள்ளது. சம்பவம் குறித்த மனுதாரரின் புகாரின் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 4 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்  நெடுஞ்சாலை சார்ந்த பணிகள் மேற்கொள்ளும் போது சாலையோரங்களில் நிற்கும் மரங்கள் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திடும் வகையில் மதுரை கலெக்டர் 8 வாரத்திற்குள் உரிய சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

 
 
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொட்டகுடியைச் சேர்ந்த பழனிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு
 
ஐகோர்ட் கிளையில் வழக்கறிஞர் எழுத்தராக உள்ளேன். கடந்த 7.7.2022ல் அலுவலகத்திற்கு டூவீலரில் சென்றேன். அழகர்கோவில் ரோட்டில் சென்றபோது சாலையோர மரம் சாய்ந்து விழுந்தது. அதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனது டூவீலரும் சேதமானது. நெடுஞ்சாலைத்துறை தரப்பில் சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணி நடந்துள்ளது. இதற்காக முறையற்ற வகையில் பள்ளம் தோண்டியதால் மரம் சாய்ந்துள்ளது. எனவே, இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ஒப்பந்ததாரர் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. மண் தோண்டப்பட்டதால் பலமிழந்து மரம் சாய்ந்துள்ளது. சம்பவம் குறித்த மனுதாரரின் புகாரின் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குபதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. எனவே, சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, 4 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நெடுஞ்சாலை சார்ந்த பணிகள் மேற்கொள்ளும் போது சாலையோரங்களில் நிற்கும் மரங்கள் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திடும் வகையில் மதுரை கலெக்டர் 8 வாரத்திற்குள் உரிய சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget