மேலும் அறிய

சிவகங்கை மாவட்டத்தில் சாலை பணிக்கான டெண்டர் ரத்து; வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்

சாலை பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. டெண்டர் நடத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

சாலைகளை சீரமைக்கும் திட்டத்தின் கீழ் கீழையூர்- தாயமங்கலம், சாலைக்கிராமம்- சருகுணி உள்ளிட்ட சாலைகளை பலப்படுத்த 1.கோடி யே 75.லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விடப்பட்ட டென்டரை  ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. டெண்டர் விதிமுறைகளை முறையாக பின்பற்றி புதிய அறிவிப்பு வெளியிட்டு டெண்டர் நடத்திக் கொள்ளலாம் - நீதிமன்றம்.
 
சாலை தொடர்பான டெண்டர்
 
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கந்தசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு,”சிவகங்கை மாவட்டத்தில் சாலைகளை பலப்படுத்துதல் மற்றும் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் கீழையூர்- தாயமங்கலம், சாலைக்கிராமம்- சருகுணி உள்ளிட்ட சாலைகளை பலப்படுத்த 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்கான இயந்திரங்களை சொந்தமாக வைத்திருப்பதற்கான ஆவணங்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பொறியாளரிடம் உரிய சான்று பெற்று அதனை பிப்ரவரி 26ம் தேதி மாலை 4 மணிக்குள் ஆன்லைன் மூலமாக டெண்டருக்கான ஆவணங்களை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
 
அமைச்சர் உதவியாளர் பெயரில் டெண்டர்
 
அதனடிப்படையில் டெண்டருக்கான விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களோடு விண்ணப்பம் செய்தேன். ஆனால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் உதவியாளர் இளங்கோவிற்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இளங்கோவிற்கு சொந்தமாக இயந்திங்கள் கிடையாது. இதில் அரசியல் தலையீடு உள்ளது. முறையாக விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களோடு டெண்டர்கோரிய நிலையில் எந்தவித காரணமின்றி நிராகரித்துள்ளனர். மேலும் சாலைப்பணியை தனது உதவியாளர் இளங்கோ மூலம் மேற்கொள்ள அமைச்சர் பெரியகருப்பன் முயல்கிறார். எனவே சாலையை பலப்படுத்துதல் பணிக்கான டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டர் அறிவிப்பு செய்து முறையாக நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. சாலை பணிக்கான விடப்பட்ட டெண்டரில் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே ஏற்கனவே விடப்பட்ட சாலை பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. டெண்டர் நடத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget