மேலும் அறிய
நாய் மீது பேருந்தை ஏற்றிய அரசு பேருந்து ஓட்டுநர் - நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை
மதுரையில் நாய் மீது அரசு பஸ் மோதி விபத்து : ஓட்டுநர் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சஸ்பெண்ட் ஆர்டர்
Source : whats app
மதுரையில் நாய் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்படுத்திய காரணத்திற்காக அரசு பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பணிமனைக்கு புகார் தெரிவித்தார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை செக்காணூரணி கிளையில் இருந்து டிரைவர் நமச்சிவாயம் என்பவர் கடந்த 9-ம் தேதி (TN 58 N - 0631) என்ற எண்ணுள்ள பேருந்தை அரசு பணிமனையில் இருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு ஓட்டி வந்துள்ளார். பேருந்து நிலையத்தில் காலை 6 மணியளவில் பேருந்தை இயக்கும்போது நாய் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாய் கால் உடைந்தது. இதை பார்த்த வழக்கறிஞர் ஒருவர் பணிமனைக்கு புகார் தெரிவித்தார்.
அரசு பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம்
இதன் அடிப்படையில் விசாரணை செய்த நிர்வாகம் அது உண்மை என கண்டறியப்பட்டதோடு நாய்க்கு சிகிச்சை அளிக்காமல் பணியில் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதாக பணிமனை நிர்வாகம் ஓட்டுனர் நமச்சிவாயத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மதுரையில் நாய் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்படுத்திய காரணத்திற்காக அரசு பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணிநீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கடும் பனி, மார்கழி பிறப்பு; மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலை நிலவரம் தெரியுமா?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொது அறிவு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement






















