மேலும் அறிய

மதுரை மக்களே உங்கள் தலைவலிக்கு விரைவில் விடிவுகாலம்... முக்கிய பாலங்கள் விரைவில் திறக்கபடவுள்ளது !

சாலைப்பாதுகாப்பு பிரிவு மற்றம் தரக் கட்டுப்பாட்டு பிரிவுகள் ஆய்வு செய்த பின்பு தான் கட்டிமுடிக்கப்பட்ட மேம்பாலம் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். - அமைச்சர் தகவல்.

எந்தப்பகுதியில் அதிக விபத்து ஏற்படுகிறது என்பதை சாலை பாதுகாப்பு பிரிவு (Road Safty Wing) அலுவலர்களிடம் கலந்தாலோசித்து சுரங்கப்பாதை அமைக்கலாமா அல்லது ஏதாவது மேம்பாலம் அமைக்கலாமா என்று முடிவு செய்யப்படும்.

அமைச்சர் ஆய்வு
 
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலை துறை சார்பில் கோரிப்பாளையம் மற்றும் அப்பல்லோ ஆகிய சந்திப்புகளில் மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவிக்கையில்...,”
 
தென்மாவட்ட திட்டங்கள் - அமைச்சர் தகவல்
 
கடந்த 10 ஆண்டு காலம் புறக்கணிக்கப்பட்ட தென் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி அமைக்கப்பட்ட பின் தமிழ்நாடு முதலமைச்சர், நெடுஞ்சாலைத்துறைக்கு பல கோடி ரூபாய்கள் ஒதுக்கி திட்டப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணியும், திருச்சியில் காவிரி மேம்பாலம் கூடுதலாக கட்டும் பணியும் மதுரை மாநகரில் 100 ஆண்டு கால பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மதுரை மாவட்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் 2100 மீட்டர் நீளத்தில் அப்பலோ சந்திப்பு மேம்பாலமும், ரூபாய் 190 கோடி மதிப்பீட்டில் கோரிப்பாளையம் சந்திப்பில் 2100 மீட்டர் நீளத்தில் மேம்பாலமும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது கட்டடப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பால பணிகள் எனது தலைமையில் 9 முறையும், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாதம் ஒரு முறையும், தலைமை பொறியாளர் அவர்கள் தலைமையில் 15 நாட்களுக்கு ஒரு முறையும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
 
மதுரையின் முக்கிய பாலங்கள்
 
அப்பலோ சந்திப்பு மேம்பாலம் கட்டிடப்பணிகள் தற்பொழுது 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வர்ணம் பூசுதல், விளக்கு அமைத்தல் உள்ளிட்ட எஞ்சிய 3 சதவீத பணிகள் டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் முடியும். இந்த மேம்பாலம் கட்டும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 7ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சரால், திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கோரிப்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் தனியார் கல்லூரி நிர்வாகம் நில எடுப்பு தொடர்பாக நீதிமன்ற வழக்கு தொடர்ந்ததன் காரணமாக ஆறு மாதம் கால தாமதமானதால் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் திறந்து வைப்பதற்கு ஏதுவாக மேம்பால பணிகளை விரைவில் செய்து  முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளை விரைவில் முடிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் வாரம் ஒரு முறை பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.
 
ரோலர் க்ராஷ் பேரியர் - தொழில்நுட்பம்
 
நெடுஞ்சாலைத்துறையில் சாலைப்பாதுகாப்பு பிரிவு மற்றம் தரக் கட்டுப்பாட்டு பிரிவுகள் ஆய்வு செய்த பின்பு தான் கட்டிமுடிக்கப்பட்ட மேம்பாலம் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். விபத்துக்களை தவிர்ப்பதற்காக கோயம்புத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் உள்ள வளைவுகளில் பயன்படுத்திய ரோலர் க்ராஷ் பேரியர்(Roller crash Barrier) என்ற அமெரிக்க தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம்.
 
சாலை பாதுகாப்பு பிரிவு
 
மேலும் தெற்குவாசல் மேம்பால பணிகளுக்கான சாத்திய ஆய்வுக்கூறுகள் ஆய்வு செய்யப்படுகிறது. பின்னர் திட்ட மதிப்பீடு தயார் செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் பணிகள் மேற்கொள்ளப்படும். மேம்பாலம் திறக்கப்பட்ட பின் எந்தப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எந்தப்பகுதியில் அதிக விபத்து ஏற்படுகிறது. என்பதை சாலை பாதுகாப்பு பிரிவு (Road Safty Wing) அலுவலர்களிடம் கலந்தாலோசித்து சுரங்கப்பாதை அமைக்கலாமா அல்லது ஏதாவது மேம்பாலம் அமைக்கலாமா என்று முடிவு செய்து அதற்கான பணிகளை செய்வோம்” - என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
Embed widget