மேலும் அறிய

dindigul: சட்டவிரோத கல்குவாரி புகாரில் அதிரடி உத்தரவு! ஆட்சியர், கனிமவளத்துறைக்கு மதுரை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பாக கனிமவளத்துறை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், வருவாய் மண்டல அலுவலர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், சிறப்பு குழு அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சட்டவிரோத கல்குவாரிகளை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கனிம வளங்களை பாதுகாப்பது கனிமவளத்துறை அதிகாரிகளின் பொறுப்பு என தெரிவித்துள்ளனர். மேலும், சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பாக கனிமவளத்துறை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், வருவாய் மண்டல அலுவலர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.


dindigul: சட்டவிரோத கல்குவாரி புகாரில் அதிரடி உத்தரவு! ஆட்சியர், கனிமவளத்துறைக்கு மதுரை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

திண்டுக்கல் மாவட்டம் பால்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த 2011 ஆம் ஆண்டு கனிம வளங்கள் கடத்தலை தடுப்பதற்கான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன இந்த நிலையில் மணல் மற்றும் சரளை கற்களை சிறு கனிமங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சுற்றுச்சூழல் கண்காணிப்பு வழிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டன. அவ்வாறு இருக்கும் போது, திண்டுக்கல் மாவட்டம் வடக்கு, தெற்கு, நிலக்கோட்டை, வேடசந்தூர், ஆத்தூர் வருவாய் மண்டலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக, சட்டவிரோதமாக கனிமவளங்கள் எடுக்கப்படுகின்றன. JCB, ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் 10 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் கனிமவளங்கள் மற்றும்  மண் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக புகார்களின் பெயரில் ஆய்வு செய்வதற்காக சிறப்பு குழுவை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நியமித்தார். அதன்படி, நிலக்கோட்டை தாசில்தார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பச்சைமலையான்கோட்டை கிராமத்தில் ஆய்வு செய்ததில் சட்டவிரோத குவாரி நடவடிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு சிறப்பு குழு ஆத்தூர் தாலுகாவில் உள்ள கிராமங்களில் சட்டவிரோத குவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதேபோல் திண்டுக்கல் மேற்கு தாலுகா பகுதியில் ஆய்வு செய்ததிலும் சட்டவிரோத நடவடிக்கை உறுதியாகியுள்ளது. இவ்வாறு திண்டுக்கல் மாவட்டத்தில் சத்திரப்பட்டி, கோலப்பட்டி, தென்னம்பட்டி, பெரும்புள்ளி, பாடியூர், நத்தம்பட்டி, சிந்துவார்பட்டி வி.புதுக்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் முறையான உரிமம் கூட பெறாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது உறுதியாக உள்ளது. இந்த ஆய்வுகள் குறித்து சிறப்பு குழுக்கள் தங்களது அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளனர்.


dindigul: சட்டவிரோத கல்குவாரி புகாரில் அதிரடி உத்தரவு! ஆட்சியர், கனிமவளத்துறைக்கு மதுரை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

ஆனால், சம்பந்தப்பட்ட குவாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை குறிப்பாக வேடசந்தூர் தாலுகாவில் சட்டவிரோத சரலை கற்கள் குவாரிகள் பிரதானமாக செயல்பட்டு வருகிறது. ஆகவே திண்டுக்கல் கிழக்கு, நிலக்கோட்டை, ஆத்தூர் வருவாய் மண்டல பகுதிகளில் தாலுகா அளவிலான சிறப்பு குழுக்களால் செய்யப்பட்ட ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் கோலப்பட்டி, தென்னம்பட்டி, பெரும்புள்ளி, பாடியூர், நத்தம்பட்டி, சிந்துவார்பட்டி வி. புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு கனிம வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வருவாய் துறை அதிகாரிகளே அதற்கான பொறுப்புடையவர்கள். ஆகவே திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பாக மனுதாரர் குறிப்பிடும் பகுதிகளில் நடைபெற்ற சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பாக கனிமவளத்துறை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், வருவாய் மண்டல அலுவலர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Embed widget