மேலும் அறிய

‘லேட்டா வர வேண்டாம்..லேட்டஸ்டாவும் வரவேண்டாம்’ - அதிகாரிகளிடம் கறார் காட்டிய கலெக்டர்

மதுரை குறைதீர் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை அனுமதிக்க மறுத்த மாவட்ட ஆட்சியர் - 2 மணி நேரத்திற்கு மேலாக நின்றபடி காத்திருந்த அரசு  அதிகாரிகள்.

பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு வராமல் தாமதமாக வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. இது என்ன பள்ளிக் கூடமா நேரத்திற்கு வரவேண்டும் என கேள்விகளும் எழுப்பிக் கொள்வார்கள் சில அதிகாரிகள். இந்த நிலையில் தாமதமாக வந்த அதிகாரிகளை பள்ளி மாணவர்களை போல் வெளியேவே நிற்க வைத்த சம்பவம் வர்வேற்பை பெற்றுள்ளது. அரசு அதிகாரிகளும் சரியான நேரத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லும் விதமாக  மதுரையில் நடைபெற்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த வாரம் மதுரை குறைதீர் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை அனுமதிக்க மறுத்த மாவட்ட ஆட்சியர் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்தார். இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகுகிறது.
 

‘லேட்டா வர வேண்டாம்..லேட்டஸ்டாவும் வரவேண்டாம்’ - அதிகாரிகளிடம் கறார் காட்டிய கலெக்டர்
 
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை அன்று குறைதீர் கூட்ட முகாம் நடைபெறும். இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக கடந்த வாரத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு கூட்டம் நடத்துவார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஆய்வு கூட்டம் தொடங்குவதில்  தாமதமாவதால் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருப்பதோடு மக்களிடம் இருந்து மனுக்கள் பெறும்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது.

‘லேட்டா வர வேண்டாம்..லேட்டஸ்டாவும் வரவேண்டாம்’ - அதிகாரிகளிடம் கறார் காட்டிய கலெக்டர்
 
இந்நிலையில் வரும் நாட்களில் குறைதீர் மனுக்களை பெறுவதற்கு முன்பாக நடைபெறும்  ஆய்வு கூட்டத்திற்கு காலை 9.30 மணிக்கு வருகை தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சங்கீதா வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் குறைதீர் கூட்டத்திற்கு காலை 9.30 மணிக்கு மேலாக வந்த அதிகாரிகளை ஆய்வு கூட்டத்திற்கு கலந்துகொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா அனுமதி மறுத்தார். இதனையடுத்து ஆய்வுக் கூட்டத்திற்காக வந்த காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துதுறை அரசு அதிகாரிகள் காலை 9:30 மணி முதல் 3 மணி மூன்று மணி நேரத்திற்கு மேலாக வெளியிலேயே காத்திருந்தனர். சில அதிகாரிகள் 2 நிமிடங்கள் தாமதமாக வந்த நிலையிலும் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தனியாக அமர்ந்தபடி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அரசு ஊழியர்கள் சில நிமிடங்கள் தாமதமாக வந்ததால் 2 மணி நேரத்திற்கு மேலாக எந்த தகவலும் சொல்லாத நிலையில் அரசு ஊழியர்கள்  5 நிமிட தாமதத்திற்காக 3 மணிநேரம் பணியை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
 

‘லேட்டா வர வேண்டாம்..லேட்டஸ்டாவும் வரவேண்டாம்’ - அதிகாரிகளிடம் கறார் காட்டிய கலெக்டர்
 
அதிகாரிகள் பலரும்  நெருக்கடியான பேரிடர் நேரங்களிலும், தேர்தல் நேரங்களிலும் இரவு பகலாக பணி நேரம் முடிந்தும் வேலை செய்துள்ளோம். ஆனால் 5 நிமிட தாமதத்திற்காக இப்படி எங்களை காத்திருக்க வைப்பதா என புலம்பினர். ஆனால் இது போல் செய்தால் தான் அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வருவார்கள் என சமூக ஆர்வலர்கள் ஆட்சியருக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Embed widget