மேலும் அறிய
மதுரை மின்தடை: மின்வாரியத்திடம் கடிதம் எழுதி வாங்கிய பெண்கள்!
இனி போன் எடுப்போம், உடனடியாக சரிசெய்வோம் இதுபோன்று தவறுகள் இனி நடக்காது என மின்வாரிய அதிகாரிகளிடமே கடிதம் எழுதி வாங்கி மின்வாரிய அலுவலகத்தில் கர்ஜித்த சிங்கப்பெண்கள்.

மின்தடை
Source : whatsapp
மதுரையில் இரவில் மின்தடை 3 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் - போன் எடுப்பதே இல்லை ரெஸ்பான்ஸ் இல்லை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கேள்விகளால் துளைத்தெடுத்து பெண்கள்.
தொடர்ச்சியாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை
மதுரை மாவட்டம் கூடல்புதூர் பகுதியில் உள்ள ஆனையூர் துணை மின்நிலையத்தி்ல் இருந்து தினமணி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தினமணி நகரை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுதாகவும், இது குறித்து புகாரளித்தால் மின்வாரிய பணியாளர்கள் அலட்சியமாக இருப்பதாகவும், மின்தடையால் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக கூறி தினமணி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துணை மின் நிலையத்தின் முன்பாக நள்ளரவில் அலங்காநல்லூர் பிரதான சாலையை, மறைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இனி போன் எடுப்போம், உடனடியாக சரிசெய்வோம் இதுபோன்று தவறுகள் இனி நடக்காது என மின்வாரிய அதிகாரிகளிடமே கடிதம் எழுதி வாங்கி மின்வாரிய அலுவலகத்தில் கர்ஜித்த சிங்கப்பெண்கள்.
தமிழகத்திலயே முதன்முறையாக மின்தடை ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை என எழுத்துப்பூர்வமாக கடிதம் வாங்கிய பெண்கள்.
மின்வாரிய பணியாளர்கள் மதுபோதையில் இருப்பதாக அதிகாரியிடம் நேருக்கு நேராக குற்றம்சாட்டிய பெண்கள்.
கரண்ட் பில் கட்டலனா பீஸ் கட்டைய புடுங்குறங்க.. இப்ப கரண்டே இல்லை யாரு பொறுப்பு.
இனி கரண்ட் கட் ஆன போராட்டம்லாம் பண்ண மாட்டோம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் பெண்கள் பேட்டி.
பொதுமக்களோடு சேர்ந்து ரீல்ஸ் எடுத்துவிட்டு தான் தவெக தொண்டன் தவெக ஆட்சியில் எல்லாம் சரியாகும் என போராட்டம் முடிந்த பின்னர் பேட்டியளித்த இளைஞரால் குழம்பிய பொதுமக்கள்.
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















