மேலும் அறிய

காவல்நிலையத்திற்குள் குற்றவாளிகள் புகுந்து வெறியாட்டம்.. மதுரையில் நடந்தது என்ன?

திருமங்கலம் அருகே காவல் நிலையத்திற்குள் புகுந்த கொலை குற்றவாளி அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி காவலரை தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு - சம்பவம் குறித்து விசாரிக்க சென்ற முன்னாள் அமைச்சர் கைது.

மதுரையில் காவல் நிலையத்திற்குள் புகுந்த கொலை குற்றவாளி அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி காவலரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலர் பால்பாண்டி பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் முகமூடி அணிந்து, இரண்டு நபர்கள் காவல் நிலையத்திற்கு புகழ்ந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு காவலர் பால்பாண்டியையும் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேரையூர் டிஎஸ்பி சந்திரசேகர் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குசென்று விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி அரவிந்தன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வி.குச்சம்பட்டி அருகில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில்  தேடப்பட்டு வரும் வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த போராளி பிரபாகரன் என்ற பிரபாகரன் என்பதும் இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்புதான் வெளியில் வந்துள்ளார். இந்த நிலையில் பிரபாகரனை அவரது வீட்டிற்கு தேடிச்சென்ற போலீசார் அவர் இல்லாததால் அவரது விரட்டி விட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற பிரபாகரன் அவரது கூட்டாளி இருவரும்  காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. 

மேலும் காவல் நிலையத்தில் பொருட்களை அடித்து உடைத்து விட்டு காவல் நிலையத்திற்கு வெளியே பூட்டு போட்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக குற்றவாளி பிரபாகரன் அவரது கூட்டாளியை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் காவல் நிலையத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது விசாரிப்பதற்காக திருமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் சத்திரப்பட்டி நோக்கி சென்ற போது தகவல் அறிந்த போலீசார் முத்துராமலிங்கபுரத்தில் தடுத்து நிறுத்தி சத்திரப்பட்டி செல்ல அனுமதி மறுத்தனர் இதனால் போலீசாருக்கும் முன்னாள் அமைச்சருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது, 

இதனைத் தொடர்ந்து கர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவரது ஆதரவாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.." தமிழகத்தில் ஸ்காட்லாந்து போலீசாருக்கு நிகராக எடப்பாடி யார் ஆட்சியில் காவல்துறையினர்  செயல்பட்டனர். தற்போது  திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் காவலர்கள் கொலை செய்யப்பட்டனர். தற்போது காவல் நிலையத்திற்குள்ளே கொலை குற்றவாளிகள் புகுந்து தகராறு செய்யும் சம்பவம் அரங்கேறி உள்ளது. பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை என்றால் மக்களை யார் பாதுகாப்பது. அதிமுக ஆட்சியில் மக்கள் தாங்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Embed widget