மேலும் அறிய

போலி பட்டா வழக்கு: நடவடிக்கை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் போலி பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு.

போலி பட்டா கொடுத்த விவகாரத்தில் அப்போதைய அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த வெவ்வேறு மனுக்களில் கூறியிருப்பதாவது:
 
இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்த 20 பேரில் 18 பேருக்கு மதுரை தெற்கு தாலுகா நிலையூர் பகுதியில் கடந்த 2012ல் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலம் வீடு கட்டி குடியிருக்க ஏதுவானதாக இல்லை. பாறைகளும், பள்ளங்களுமாய் உள்ளது. ஏற்கனவே, ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து, அதே இடத்தில் போலியாக பட்டா கொடுத்துள்ளனர். 
 
எனவே, போலியாக பட்டா வழங்கிய விவகாரத்தில் அப்போதைய  அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று இடத்தில் பட்டா வழங்க வேண்டும். பட்டா வழங்குவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அப்போதைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கையும் எடுக்க வேண்டுனெ கூறியிருந்தார்.
 
இந்த மனுவை  விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் போலி பட்டா கொடுத்த விவகாரத்தில் அப்போதைய அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லா விட்டால் அவர் ஆஜராகுமாறு உத்தரவிடப்படும் என  உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

மற்றொரு வழக்கு
 
ராமநாதபுரம் பெரிய கண்மாய், ஆர் எஸ் மங்கலம் கண்மாய்க்கு நீர் வரும் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு
 
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் ," "வறட்சியான மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாய் மற்றும் ஆர்எஸ் மங்கலம் கண்மாய் பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டவை. இந்த கண்மாய்களே ராமநாதபுரம் மாவட்ட நீர்நிலைகளுக்கான நீரை வழங்கி, குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்கின்றன.  தற்போது பருவமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்ட நிலையிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை. காரணம் பெரிய கண்மாய் மற்றும் ஆர்எஸ் மங்கலம் கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய்கள், துணை கால்வாய்கள் மற்றும் ஊருணிகள் முறையாக பராமரிக்கப்படாததே.  பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல கால்வாய்கள் முட்செடிகளால் நிறைந்துள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே ராமநாதபுரம் மாவட்டம் பெரிய கண்மாய் ஆர் எஸ் மங்கலம் கண்மாய்க்கு நீர் வரும் வரத்து கால்வாய்கள், ஊரணிகள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அவற்றை முறையாக பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும் " என கூறியிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, வழக்கு தொடர்பாக, பொதுப்பணி துறையின் மதுரை மாவட்ட தலைமை பொறியாளர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
 

 
 
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget