மேலும் அறிய

போலி பட்டா வழக்கு: நடவடிக்கை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் போலி பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு.

போலி பட்டா கொடுத்த விவகாரத்தில் அப்போதைய அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த வெவ்வேறு மனுக்களில் கூறியிருப்பதாவது:
 
இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்த 20 பேரில் 18 பேருக்கு மதுரை தெற்கு தாலுகா நிலையூர் பகுதியில் கடந்த 2012ல் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலம் வீடு கட்டி குடியிருக்க ஏதுவானதாக இல்லை. பாறைகளும், பள்ளங்களுமாய் உள்ளது. ஏற்கனவே, ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து, அதே இடத்தில் போலியாக பட்டா கொடுத்துள்ளனர். 
 
எனவே, போலியாக பட்டா வழங்கிய விவகாரத்தில் அப்போதைய  அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று இடத்தில் பட்டா வழங்க வேண்டும். பட்டா வழங்குவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அப்போதைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கையும் எடுக்க வேண்டுனெ கூறியிருந்தார்.
 
இந்த மனுவை  விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் போலி பட்டா கொடுத்த விவகாரத்தில் அப்போதைய அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை கலெக்டர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லா விட்டால் அவர் ஆஜராகுமாறு உத்தரவிடப்படும் என  உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

மற்றொரு வழக்கு
 
ராமநாதபுரம் பெரிய கண்மாய், ஆர் எஸ் மங்கலம் கண்மாய்க்கு நீர் வரும் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு
 
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் ," "வறட்சியான மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாய் மற்றும் ஆர்எஸ் மங்கலம் கண்மாய் பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டவை. இந்த கண்மாய்களே ராமநாதபுரம் மாவட்ட நீர்நிலைகளுக்கான நீரை வழங்கி, குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்கின்றன.  தற்போது பருவமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்ட நிலையிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை. காரணம் பெரிய கண்மாய் மற்றும் ஆர்எஸ் மங்கலம் கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய்கள், துணை கால்வாய்கள் மற்றும் ஊருணிகள் முறையாக பராமரிக்கப்படாததே.  பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல கால்வாய்கள் முட்செடிகளால் நிறைந்துள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே ராமநாதபுரம் மாவட்டம் பெரிய கண்மாய் ஆர் எஸ் மங்கலம் கண்மாய்க்கு நீர் வரும் வரத்து கால்வாய்கள், ஊரணிகள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அவற்றை முறையாக பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும் " என கூறியிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, வழக்கு தொடர்பாக, பொதுப்பணி துறையின் மதுரை மாவட்ட தலைமை பொறியாளர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
 

 
 
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget