மேலும் அறிய

பட்டி மாடுகள் முன் பேசவுள்ள சீமான்... மதுரையில் ஆடு, மாடுகள் மாநாடு இன்று இப்படி தான் நடக்கப் போகிறது !

ஆடு, மாடுகள் மாநாடு: பட்டிமாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், கிடாய்கள் என மாநாட்டில் பல்வேறு கால்நடைகள் முன் சீமான் பேசவுள்ளார்.

”ஆடு, மாடுகள் மாநாட்டை சுற்றி எல்.ஈ.டி., திரைகள் அமைத்து, அதில் தொண்டர்கள் அண்ணனின் பேச்சை கேட்கும் படியாக அமைத்துள்ளோம்”.

மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை - நா.த.க., சார்பில் ஆடு, மாடுகள் மாநாடு
 
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக, "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை". - என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், இன்று மதுரை விராதனூர் பகுதியில் ஆடு, மாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு பணிகளை உழவர் பாசறை தலைவர் செங்கண்ணன் முழுமையாக கவனித்து வருகிறார். இயற்கை விவசாயம், கள் எடுக்கும் உரிமை, தேவையற்ற நவீன வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசிவருகிறார் சீமான். இந்த சூழலில் கால்நடைகள் வனப்பகுதிகளுக்குள் சென்று மேய்ச்சல் செய்வதற்கான தடை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்துகிறார். வரலாற்றில் முதல்முறையாக ஆடு, மாடுகளுக்கான மாநாடு நடைபெறுவது கவனம் பெற்றுள்ளது.
 
மாநாட்டில் சீமான் உரை - எல்.ஈ.டி., திரையில் 
 
இந்நிலையில் ஆடு, மாடுகளுக்கான மாநாடு குறித்து நா.த.க., உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மு.க.சின்னண்ணன் கூறுகையில்..,” ஆடு, மாநாடுகள் மாநாட்டு திடலில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக மாட்டுத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் ஆயிரக்கணக்கான மாடுகள் நிற்க வைக்கப்படும். மேடையின் இருபுறமும் ஜல்லிக்கட்டு காளைகள் நிறுத்தி வைக்கப்படும். அதே போல் மேடை முன்பாக உள்ள காலி இடத்தில் கிடாய்கள் மற்றும் ஆடுகள் நிறுத்தி வைக்கப்படும். பட்டியில் அடைக்கப்பட்ட மாடுகளுக்கு மின்னொளி மற்றும் ஒலிபெருக்கி செயல்படுத்தி, கடந்த சில நாட்களாகவே சோதனைகள் செய்யப்பட்டு விட்டது. இதனை சீமான் அவர்கள் கடந்த சில நாட்களாகவே நேரில் வந்து ஆய்வு செய்தார். இதனால் கால்நடைகளுக்கு தொந்தரவு இல்லாத வகையில் மாநாடு நடைபெறும். இம்மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் அனைத்து பாசன பாசறைகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர். ஆனால் மாநாடு குறித்த நேரத்தில் மட்டும் தான் தொண்டர்கள் திடலுக்கு வரவேண்டும். முக்கிய நிர்வாகிகள் மட்டுமே திடலில் பணி செய்வார்கள்.
 
ஆடு, மாடுகள் முன் சீமான் பேச்சு
 
கிட்டத்தட்ட பத்து நாட்களாக விராதனூர் பகுதியில் மாநாட்டிற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. கால்நடைகளுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதற்காக, வாகனங்களை மாநாட்டு திடலில் இருந்து தூரமாக நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பு பாசறை கவனித்துக் கொள்வார்கள். மாநாட்டை சுற்றி எல்.இ.டி திரைகள் அமைத்து, அதில் தொண்டர்கள் அண்ணனின் பேச்சை கேட்கும் படியாக அமைக்கப்பட்டுள்ளது. விராதனூர் முள் காட்டுப் பகுதியில் மாநாடு நடைபெறுவதால் கொடிகள் அமைக்கப்பட்டு பாதைகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. குப்பைகள் இல்லாத படி அந்த இடங்கள் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. சரியாக ஆறு மணி அளவில் தான் அண்ணன் பேச உள்ளார். வேறு யாரும் பேச வாய்ப்புகள் குறைவு தான்”. என்றும் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
விவசாயிகளின் நண்பன் சிலந்திகள்... தீமை செய்யும் பூச்சிகளை வேட்டையாடும் வேட்டைக்காரன்
விவசாயிகளின் நண்பன் சிலந்திகள்... தீமை செய்யும் பூச்சிகளை வேட்டையாடும் வேட்டைக்காரன்
கருகும் குறுவை கனவுகள்! சான்றிதழ் தர மறுக்கும் விஏஓக்கள்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய விவசாயிகள்
கருகும் குறுவை கனவுகள்! சான்றிதழ் தர மறுக்கும் விஏஓக்கள்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய விவசாயிகள்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget