மதுரையில் டைடல் பார்க் கட்டுமான பணி - மண் பரிசோதனை துவக்கம்
12 இடங்களில் மண் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கி விட்டதாகவும் இந்த பணிகள் இன்னும் ஒரு வார காலத்திற்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையிலும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
— arunchinna (@arunreporter92) November 29, 2023
மதுரையில் 600 கோடி மதிப்பில் முதல் கட்டமாக டைடல் பார்க் கட்டுமான பணி - மண் பரிசோதனை துவக்கம்.@Manothangaraj #abpnadu pic.twitter.com/cmRyyd0K4W
மதுரையில் கடந்த செப்டம்பர் மாதம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் நடந்த தெற்கு மண்டல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் மாநகராட்சி கமிஷனர் மற்றும் வருவாய்த்துறை, நில அளவை, நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது மதுரை மாட்டுத்தாவணி மைதா னத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பூர்வாங்க பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது டைடல் பார்க் அமைக்க தேவையான நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் டைடல் நிர்வாகத்திற்கு நிறுவனத்திற்கு விரைவாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முதல் கட்டமாக 5.5 ஏக்கர் டைட்டன் நிர்வாகத்திற்கு வழங்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த இடமானது முழுமையாக சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது கட்டுமான பணி நடைபெற உள்ள ஐந்து - புள்ளி - ஐந்து ஏக்கர் நிலத்தில் 12 இடங்களில் மண் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கி விட்டதாகவும் இந்த பணிகள் இன்னும் ஒரு வார காலத்திற்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ' - பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடையா? இதுதான் உங்க தேச பக்தியா? - சரமாரியாக சாடிய உச்ச நீதிமன்றம்!
Before You Go
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















