மேலும் அறிய

கஞ்சா கடத்திய குடும்பத்தின் ரூ.5.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - மதுரையில் போலீஸ் அதிரடி நடவடிக்கை !

மதுரையில் 170 கிலோ கஞ்சா கடத்திய ஒரே குடும்பத்தின் 5.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி காவல்துறை அதிரடி நடவடிக்கை.

தென்மண்டல ஜி.ஜியாக அஸ்ராகார்க் பொறுப்பேற்ற நிலையில் மதுரை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை விற்பனையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை  தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் கொடுங்குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுடைய சட்டவிரோத செயல்களை தடுக்கும் விதமாக மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த கஞ்சா விற்பனை குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர் நடவடிக்கையாக முதன்முறையாக  மதுரையில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஒரே குடும்பத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதியன்று மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் இரு வீடுகளில் 90 பொட்டலங்களாக கட்டி வைக்கப்பட்டிருந்த 170 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து கஞ்சா விற்பனை மற்றும் பதுக்கலில்  ஈடுபட்ட மதுரை காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த காளை மற்றும் அவரது மனைவி பெருமாயி மற்றும் காளப்பன்பட்டியை சேர்ந்த அய்யர் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது 15க்கும் மேற்பட்ட கஞ்சா விற்பனை வழக்குகளும் இருந்தது தெரியவந்துள்ளது. 

கஞ்சா கடத்திய குடும்பத்தின் ரூ.5.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - மதுரையில் போலீஸ் அதிரடி நடவடிக்கை !
இந்நிலையில், போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கஞ்சா விற்கும் தொழில் செய்து அதில் ஈட்டிய பணத்தையும், அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளையும் அவரது உறவினர்கள் பெயரில் ஈட்டிய சொத்துக்களையும் பறிமுதல் செய்யலாம் . அடிப்படையில் மூவரின்  சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டது

கஞ்சா கடத்திய குடும்பத்தின் ரூ.5.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - மதுரையில் போலீஸ் அதிரடி நடவடிக்கை !
 
இதனை தொடர்ந்து சொத்து விபரங்கள் கணக்கில் எடுக்கப்பட்டு  மூன்று பேருக்கும் சொந்தமான மதுரை மாநகர் பகுதியில் காமராஜர் சாலை பகுதியில் உள்ள 8 வீட்டுமனைகள், மேலூர் சூரக்குண்டு பகுதியில் உள்ள பல ஏக்கர் மதிப்பிலான விவசாய நிலங்கள், கம்மாளப்பட்டி, காளப்பான்பட்டியில் உள்ள வீடு என மொத்தம் 19 அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என சுமார் 5.5 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் அசையா சொத்துக்களை முடக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 
மேலும்,  மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர், மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும், தொடர்ச்சியாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கஞ்சா தொழில் மூலம் வாங்கிய  சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் அனைத்தும் சட்டப்படி முடக்கம் செய்யப்படும் எனவும், கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள், கஞ்சா வியாபாரிகள் அவர்களது உறவினர்கள் அண்ணன், தம்பிகள், மனைவி உள்ளிட்டோர் பெயரில் வாங்கும் சொத்துக்கள் குறித்து மாவட்ட காவல்துறை விசாரணை செய்வதோடு, அவற்றை சட்ட ரீதியாக முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல்துறையும், தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget