மேலும் அறிய

Rajendra Balaji Case: ராஜேந்திர பாலாஜிக்காக வாதாடினால் வீட்டை சோதனை செய்வீர்களா? - காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

வழக்கறிஞர் மாரீஸ்குமாரின் வீட்டில் சோதனை செய்தவையன்று நடந்தவற்றை சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் பதில் மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்குகளில் ஆஜரானார் என்பதற்காக  வழக்கறிஞர் மாரீஸ்குமாரின் வீட்டில் சோதனை செய்தது ஏற்கத்தக்கதல்ல என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரி நான்.  முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உறவினர் என்பதற்காக என்னையும், எனது மகன்கள் மற்றும் ஓட்டுனரையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார் 

இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜிக்கான வழக்குகளில் ஆஜரான, வழக்கறிஞர் மாரீஸ்குமார் வீட்டில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி எவ்வித அனுமதியுமின்றி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது நீதிபதி நகைச்சுவையாக, "ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார்?" என கேள்வி எழுப்பினார்.

அதற்கு வழக்கறிஞர் மாரீஸ்குமார், " நாளை அல்லது நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. அதன் பின்பே தெரியவரும்" என குறிப்பிட்டார்.

அதற்கு நீதிபதி, ராஜேந்திர பாலாஜியின் வழக்குகளில் ஆஜரானார் என்பதற்காக வழக்கறிஞரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டது ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்டார். தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினரை செல்போன் வாயிலாக அழைத்து, வழக்கறிஞர் மாரீஸ்குமாரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டதை உறுதி செய்தார். அந்த குழுவின் தலைவர் சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் என்பதையும் உறுதி செய்து, அவற்றைப் பதிவு செய்து கொண்டார். பின்னர் யாருடைய அறிவுறுத்தலின் பேரில்,  வீட்டில் சோதனை செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினார்.


Rajendra Balaji Case: ராஜேந்திர பாலாஜிக்காக வாதாடினால் வீட்டை சோதனை செய்வீர்களா? - காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

அதற்கு சிவபாலன் தரப்பில், மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில், வழக்கறிஞரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி, வழக்கறிஞரின் வீட்டினுள் சென்று சோதனை செய்தீர்களா? சோதனைக்கான வாரண்ட் இருந்ததா? என கேள்வி எழுப்பினார். அதற்கு காவல்துறை தரப்பில்,"இல்லை" என பதிலளிக்கப்பட்டது.

அவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கறிஞர் மாரீஸ்குமாரின் வீட்டில் சோதனை செய்தவையன்று நடந்தவற்றை பதில்மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து, சோழவந்தான் காவல் ஆய்வாளரை மதுரை நகர் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் மாரீஸ் குமாரின் வீட்டில் சோதனை செய்தது எப்படி? என்பது குறித்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
Watch Video: நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் - காலையிலே திக்.. திக்..!
Watch Video: நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் - காலையிலே திக்.. திக்..!
JOB ALERT: இன்டர்வியூக்கு வாங்க அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்குங்க.! 5000 பேருக்கு ஜாக்பாட் ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வாங்க அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்குங்க.! 5000 பேருக்கு ஜாக்பாட் அறிவிப்பு
Embed widget