மேலும் அறிய

கொடைக்கானல்: காட்டு யானையின் தொந்தரவால் கதிகலங்கும் கிராம மக்கள்!

கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில்  500க்கும் மேற்பட்ட  வாழை மரங்களை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் மலைகிராம விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை,பாரதி அண்ணாநகர், அஞ்சுவீடு, பள்ளங்கி கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக  காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களையும்,விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே உள்ள தனியார் தோட்டத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பலா, காப்பி, ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட மலை பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று இரவு இப்பகுதிதிகளில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் பலா மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

கொடைக்கானல்: காட்டு யானையின் தொந்தரவால் கதிகலங்கும் கிராம மக்கள்!

மேலும் 4 லட்சம் மதிப்புள்ள பயிர்களை காட்டு யானை சேதப்படுத்தியுள்ளதாக விவசாயி கவலையுடன் கூறுகின்றனர்.   காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதை  தடுப்பதற்கு பல முறை மனு அளித்தும் வன துறையினர் எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதி  கிராம விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது ஒற்றை காட்டு யானையால் சேதமடைந்துள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மலை கிராம விவசாயிகள் வன துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல்: காட்டு யானையின் தொந்தரவால் கதிகலங்கும் கிராம மக்கள்!
கொடைக்கானல் பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சுவீடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் வருவதை தடுப்பதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஒற்றை காட்டு யானை கடந்த சில தினங்களாக பேத்துப்பாறை குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரங்களில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.



கொடைக்கானல்: காட்டு யானையின் தொந்தரவால் கதிகலங்கும் கிராம மக்கள்!

மேலும் இந்தபகுதிகள் மலையடிவார பகுதியாக இருப்பதால்,இப்பகுதியை ஒட்டியுள்ள வன பகுதியின் வழியாக கொடைக்கானல் பகுதியில் ஊருக்குள் காட்டு யானை அடிக்கடி வருகிறது. மேலும் இந்த மலை கிராமங்களில் விளைவிக்கப்படும் பயிர்களை வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களையும், விளை பயிர்களையும் சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாக உள்ளது என  இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கொடைக்கானல்: காட்டு யானையின் தொந்தரவால் கதிகலங்கும் கிராம மக்கள்!

 வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் ஊருக்குள் வந்து பொதுசொத்துக்களை சேதப்படுத்துவதுடன் அவ்வப்போது உயிர்பலியும் ஏற்படுத்தி வருகிறது. காட்டு யானை தாக்கியதில் கடந்த 2 வருடத்திற்குள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் , குறிப்பாக கொடைக்கனாலுக்குச் செல்ல மலை வழிமார்க்கமாக செல்லும் சூழ் நிலையில் வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் காட்டுயானை மலைவழிச்சாலையாக  செல்லும் வாகன ஓட்டிகளை வழிமறிப்பதும், அச்சுறுத்தி வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

தேனியில் சிக்கி தவிக்கும் ஓபிஎஸ், தகவலை படித்து தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்... பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க திட்டம்?

தலைப்பு செய்திகள்

அமராவதி அணை: கரூர், திருப்பூர் குடிநீர் - ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
அமராவதி அணை: கரூர், திருப்பூர் குடிநீர் - ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
Madurai Hc ; முன்னுரிமை பிரிவுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரையை விசாரிக்க தனி குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு !
Madurai Hc ; முன்னுரிமை பிரிவுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரையை விசாரிக்க தனி குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு !
கீழடி அகழாய்வில் மீன் உருவம் பொறித்த அரிய பானை - சங்க கால ரகசியம் வெளிச்சத்திற்கு !
கீழடி அகழாய்வில் மீன் உருவம் பொறித்த அரிய பானை - சங்க கால ரகசியம் வெளிச்சத்திற்கு !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Embed widget