மேலும் அறிய

ஆர்ப்பரிக்கும் மழை வெள்ளம்: ஆபத்தை உணராமல் கரையை கடக்கும் மழை வாழ் மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கூக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் மூங்கில்காடு என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆபத்தை உணராமல் மழை வெள்ளத்தில் கரையை கடக்கின்றனர்.

தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கக்கூடும். வரும் 11-ந் தேதி( நாளை மறுநாள்) கடலோரப் பகுதியில் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ப்பரிக்கும் மழை வெள்ளம்: ஆபத்தை உணராமல் கரையை கடக்கும் மழை வாழ் மக்கள்!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் கனமழை 11-ந் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இன்று தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், பெய்தது.


ஆர்ப்பரிக்கும் மழை வெள்ளம்: ஆபத்தை உணராமல் கரையை கடக்கும் மழை வாழ் மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த 10 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் மழை குறைந்திருந்த நிலையில், இரவு 11 மணி முதல் விடிய, விடிய கன மழை பெய்தது நேற்று மதியம் 12 மணி வரை மழை நீடித்தது. அதன்பிறகு பிற்பகல் 3 மணி முதல் மாலை வரை தொடர்ந்து மழை பெய்தது. தொடர்மழை எதிரொலியாக மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் மின்சார வயர்கள் ஆங்காங்கே அறுந்து விழுந்தன. இதனால் பல்வேறு கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. கூக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் மூங்கில்காடு என்ற கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர மக்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்ப்பதால் அப்பகுதியில் செல்லும் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


ஆர்ப்பரிக்கும் மழை வெள்ளம்: ஆபத்தை உணராமல் கரையை கடக்கும் மழை வாழ் மக்கள்!

இதனால் மலைக்கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கிராம மக்கள் ஆபத்தை உணராமல், பெருக்கெடுத்து ஓடுகிற காட்டாற்று வெள்ளத்தை கடந்து வருகின்றனர். காட்டாற்றின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரத்தில் ஏறிச்சென்று, தங்களுக்கு தேவையான பொருட்களை மலைக்கிராம மக்கள் வாங்கி செல்கின்றனர். பெண்கள் சிலர் ஒருவரையொருவர் கையை பிடித்த படி காட்டாற்று வெள்ளத்தை கடக்கின்றனர். இதனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே மூங்கில்காடு கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  இதனிடையே தொடர் மழை காரணமாக, நேற்று பகலில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
US Venezuela Russia: “அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
“அபாயகரமான தவறை செய்யப் பார்க்கிறார் ட்ரம்ப்“; வெனிசுலாவிற்கு வக்காலத்து வாங்கும் ரஷ்யா
Trump on US Citizenship: 2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
2026-ல் மாதத்திற்கு 100-200 பேரின் அமெரிக்க குடியுரிமை பறிப்பா.?! ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.?
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Embed widget