மேலும் அறிய

குரல் கொடுக்க முடியாத மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டியதே அரசின் கடமை - முதலமைச்சர் ஸ்டாலின்

உரத்த குரல் கொடுக்க முடியாத மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டியதே அரசின் கடமை எனவும், மாவட்ட வாரியான தேவைகளை உணர்ந்து ஆட்சியர்கள் செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாவட்ட வாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள், நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராஜ கண்ணப்பன், சக்கரபாணி, மூர்த்தி, பி.டி.ஆர். உதயநிதி, தலைமை செயலாளர் இறையன்பு, மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர், தேனி ஆட்சியர் ஷஜீவனா, திண்டுக்கல் ஆட்சியர் விசாகன், சிவகங்கை ஆட்சியர் மதுசூதன ரெட்டி, ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அனைத்து துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

குரல் கொடுக்க முடியாத மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டியதே அரசின் கடமை - முதலமைச்சர் ஸ்டாலின்
 
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "தென் மாவட்டத்தை தொழில் ரீதியாக மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராமப்புற மக்களின் வருமானத்தை பெருக்கும் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
வேலை உறுதி திட்டங்களில் கீழ் வேலை வழங்கும் சராசரி நாட்களை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் முன்னுரிமை என்ன என்பதை உணர்ந்து ஆட்சியர்கள் செயல்பட வேண்டும். அரசு நிர்வாகம் என்பது யாரால் உரத்த குரல் கொடுக்க முடியாதோ, அவர்களின் தேவையை உணர்ந்து அவற்றை நிறைவேற்று தருவதே ஆகும்.

குரல் கொடுக்க முடியாத மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டியதே அரசின் கடமை - முதலமைச்சர் ஸ்டாலின்
சமுதாயத்தில் பின்தங்கிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள், திருநங்கைகள் கோரிக்கைகளை அறிந்து நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. சமூக நீதியின் குரலே இப்போது ஓங்கி ஒலிக்கிறது. வேலை, பொருளாதாரம் உள்ளிட்டவையில் அனைவருக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாவட்ட வாரியான தேவைகளை உணர்ந்து செயல்படுத்த வேண்டும். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பழ, காய்கறி விவசாயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிவகங்கையில் வறட்சியை கருத்தில் கொண்டு புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். மதுரையின் நகர் பகுதியை மையமாக வைத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
 
அரசின் திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் மக்களிடம் சேர்க்கும் பொறுப்பு ஆட்சியர்களுக்கே உண்டு. பட்டா மாறுதல், சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டியது மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பணி. மக்களை பொருத்த வரை ஆட்சியர்கள் தான் அரசு. அவர்களின் தேவைகளை நீங்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். மனு என்பது வெறும் காகிதம் அல்ல. அது ஒரு மனிதரின் கனவு, வாழ்க்கை, எதிர்காலம்" என தெரிவித்தார். கூட்டம் முடிந்து வெளியே வந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சியர் அலுவலக வாயிலில் திரண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டார்.
 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget