மேலும் அறிய

''உள் அர்த்தம் புரிந்தது.. தூக்கம் வரவில்லை''.. திடீரென பாஜக எதிர்ப்பு - சரவணன் விளக்கம்!

”தி.மு.க., என்னுடைய தாய் கழகம் தான். ஆனால் பி.ஜே.பி.,யில் இருக்க மாட்டேன். மத அரசியலை விரும்ப மாட்டேன். அனைவருக்கும் பொதுவான மருத்துவராக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்”  

"நம்முடைய ராணுவ வீரர், நாட்டுக்காக உயிர் நீத்த தம்பி லெட்சுமணனின் பூத உடலுக்கு வீரவணக்கம் செலுத்த எல்லோரையும் போல பி.ஜே.பி.,யினரும் விமான நிலையத்திற்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு வந்த நிதி  அமைச்சர் “என்ன தகுதியின் அடிப்படையில் வந்தீர்கள்”   என கேட்டார். இதனை பர்சனலாக எடுத்துக்கொண்டோம். அதே சமயம் நானும் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் போது விரும்பதகாத நிகழ்வு நடத்துவிட்டது. நான் வீட்டிற்கு சென்ற பின்பும் மன உருத்தலாக இருந்தது. பின்பு தெளிவுபெரும் போது தான் புரிந்தது. அமைச்சர் அவர்கள் வெளிநாட்டில் படித்ததால் அவர் பேசும் தமிழில் என்ன சொல்கிறார் என்றால் “என்ன தகுதி” என்று கேட்ட புரோட்டோக்காலை குறிப்பிட்டுள்ளார். அரசு உடலை ரிசீவ் செய்து, ராணுவ வீரரின் கிராமத்திற்கு அனுப்புகிறது. அதனால் தனிப்பட்ட நபர்கள் விமான நிலையத்திற்கு வெளியிலோ, ராணுவ வீரரின் கிராமத்திலோ மரியாதை செய்யலாம் என்ற அடிப்படையில் சொல்லியுள்ளார்.


'உள் அர்த்தம் புரிந்தது.. தூக்கம் வரவில்லை''.. திடீரென பாஜக எதிர்ப்பு - சரவணன் விளக்கம்!

ஆனால் அதனை நான் உட்பட பி.ஜே.பி., தொண்டர்கள் அனைவரும் தனி மனித தாக்குதலாக எடுத்துக்கொண்டோம். ஆராய்ந்து பார்க்கும் போது தான் அதன் உள்அர்த்தம் புரிந்தது. சுயமரியாதை இயக்கமான திராவிட குடும்பத்தில் இருந்து வந்த நான், ஒரு வருடத்திற்கு முன்பு தான் பி.ஜே.பி.,யிற்கு வந்தேன். பி.ஜே.பி.,யில் எப்போதுமே சிறுபான்மையினருக்கு எதிரான போக்கு இருந்து கொண்டே இருக்கும். இந்த மன உளைச்சலோடு தான் கடந்த ஒருவட காலமாக பி.ஜே.பி.யில் பயணம் செய்துகொண்டிருக்கிறேன். இதனை அவ்வப்போது வெளிப்படுத்தியுள்ளேன்.

 

இந்த சூழலில் அமைச்சரின் மீது தாக்குதலை ஏற்படுத்திய மிகப்பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை நினைத்து தூக்கம் வரவில்லை. அமைச்சர் பி.டி.ஆர்., தியாகராஜன் அவர்களது வீட்டிற்கு அடிக்கடி, வந்துள்ளேன். இதுவும் ஒரு தாய் வீடு போல தான். அதனால் அமைச்சரை பார்க்க வேண்டும் என அனுமதி கேட்டு சந்தித்தேன். அவரிடம் என்னுடைய வருத்தத்தை  தெரிவித்துக்கொண்டேன். ஏற்கனவே கார்கில் போரில் நடைபெற்ற சம்பவத்திற்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளேன். அப்போது நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். தற்போது நான் மருத்துவராகவும், மாவட்ட தலைவராகவும் இருந்தாலும் பொது ஜனம் தான். எனவே அந்த இடத்தில் இருந்திருக்க கூடாது. இருந்த போதிலும் மாநில தலைவர் அண்ணாமலை, புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன், நான் உட்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினோம். ஆனால் தொண்டர்கள் கட்டுப்பாட்டை இழந்து கசப்பான சம்பவம் நடைபெற்றுவிட்டது. இது மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. அமைச்சரிடம் இது குறித்து விளக்கத்தை அளித்துள்ளேன். இதனை அமைச்சர் கேசுவலாக எடுத்துகொண்டுள்ளார். ஆரம்பத்தில் இருந்து சுயமரியாதை இயக்கத்தில் வளர்ந்தவன். இந்த சூழலில் துவேசமான அரசியலை செய்ய நானும் ஒரு ஆளாக இருந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் அமைச்சரை சந்திதேன். தற்போது மைண்ட் ப்ரீயாக உள்ளது. இனி நிம்மதியாக தூங்குவேன்”


'உள் அர்த்தம் புரிந்தது.. தூக்கம் வரவில்லை''.. திடீரென பாஜக எதிர்ப்பு - சரவணன் விளக்கம்!

தி.மு.க., அமைச்சரை சந்திப்பதால் பி.ஜே.பி.,யில் பதவி போகாதா ?

”நான் அமைச்சரிடம் வருத்தம் தெரிவிக்கவரவில்லை. மன்னிப்பு கேட்பதற்காக தான் வந்தேன். எனக்கு கட்சி பதவியைவிட மன அமைதிதான் முக்கியம். அதனால் தான் அமைச்சரை சந்தித்தேன். இனி பி.ஜே.பியில் தொடர மாட்டேன். இந்த மத அரசியல், வெறுப்பு அரசியல் பிடிக்கவில்லை. பி.ஜே.பி.,யில் தொடரப் போவதில்லை.

தி.மு.க.,வில் மீண்டும் இணைவீர்களா? 

”தி.மு.க.,வில் இணைவது குறித்து தற்போது யோசிக்கவில்லை. இணைந்தாலும் தப்பில்லை. தி.மு.க., என்னுடைய தாய் கழகம் தான். ஆனால் பி.ஜே.பி.,யில் இருக்க மாட்டேன். மத அரசியலை விரும்ப மாட்டேன். அனைவருக்கும் பொதுவான மருத்துவராக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்”  

 

இந்நிலையில் பி.ஜே.பி மாநில தலைவர் அண்ணாமலை  டாக்டர் சரவணன் நீக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ராணுவ வீரரின் உடல் 21குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் - ஏராளமானோர் அஞ்சலி

தலைப்பு செய்திகள்

நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget