மேலும் அறிய

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குளறுபடி நான் எந்த மனுவும் கொடுக்கவில்லை” - குறுஞ்செய்தி வந்ததாக ஆர்.பி.உதயகுமார் அதிர்ச்சி

மக்களை ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும் மிகப் பெரிய அளவிலே இது ஒரு மோசடியாகத்தான் பார்க்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “திமுக அரசின் மகளிர் உரிமை திட்டத்தில் கடும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதிகாரத்திற்கு வந்ததற்கு பிறகு தங்கள் அடையாளத்தை சுயரூபத்தை திமுக அரசு காட்டத் தொடங்கி இருக்கிறது. எல்லோருக்கும் மகளிர் உரிமைத்தொகை என்று சொன்ன அந்த வசனத்தை மாற்றி,  தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை என்று மகளிரை வஞ்சிக்கின்ற காட்சிகளை நாம் பார்க்கிறோம்.  அது மட்டுமல்ல குளறுபடியின் மொத்த அடையாளமாக இந்த திட்டம் இன்றைக்கு இருக்கிறது. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பதை போல, மக்களுடைய கவனத்திற்கு, அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். செல்லுகிற இடங்களில் எல்லாம் மக்கள் எங்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லை என்று தொடர்ந்து குரல் எழுப்புகிறார்கள். 
 
 
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குளறுபடி நான் எந்த மனுவும் கொடுக்கவில்லை” - குறுஞ்செய்தி வந்ததாக ஆர்.பி.உதயகுமார் அதிர்ச்சி
 
இதே அபய குரல் தமிழ்நாடு முழுவதும் கேட்பதாக செய்திகளில் நாம் அறிகிறோம். இப்படி இருக்கிற சூழ்நிலையிலே, அரசின் சார்பிலே ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டது. அதில் ஒரு கோடி ரூ. 60 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 60 லட்சம் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களுக்கு வங்கியில் மூலமாக அவர்களுக்கு 1000ரூ கொடுக்கப்பட்டிருக்கிறது என்று புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 லட்சம் மனுக்களை தள்ளுபடி செய்தாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நான் இதில் விண்ணப்பிக்கவில்லை ஆனால் எனக்கே தள்ளுபடி செய்ததாக 99421 34 419 நம்பரில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத காரணத்தால் தங்களது விண்ணப்பத்தை ஏற்க இயலவில்லை.  காரணம்: ”குடும்பத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து பிற ஓய்வூதியம் பெறுபவர் உள்ளனர்”.

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குளறுபடி நான் எந்த மனுவும் கொடுக்கவில்லை” - குறுஞ்செய்தி வந்ததாக ஆர்.பி.உதயகுமார் அதிர்ச்சி
 
இதுகுறித்து மேல்முறையீடு செய்ய விரும்பினால் அருகில் உள்ள இ-சேவை மையம் வழியாக கோட்டாட்சியருக்கு 30 நாட்களுக்குள[<<>>].org/ என்ற இணையதளத்தை அணுகலாம். முதல்வரின் முகவரி உதவி மைய எண்: 1100 -TNGOVT என்று அனுப்பப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பலருக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கும் குறுஞ்செய்தி செய்திகள் வருவதாகவும், சிலருக்கு பணம் கிடைத்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அரசே தகுதியை நிர்ணயித்து தள்ளுபடி செய்து, அதனை திரும்பியும் மேல் முறையீடு செய்யலாம் என்று  சொல்வதை தமிழ்நாடு மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். ஆகவே குளறுபடியின் மொத்த அடையாளமாக இருக்கிறது. இன்றைக்கு முதலமைச்சர் இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக சொல்கிறார்.  ஒரு கோடி பேருக்கு இலக்கை நிர்ணயம் செய்து விட்டு தற்போது ஆய்வு செய்கிறோம் என்பது கண்துடைப்பு நாடகமாகும். வரையறை  நிர்ணயித்ததற்கு பிறகு நீங்கள் தான் சட்டசபையில் அறிவிக்கிறீர்கள். இன்றைக்கு ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர்கள் எங்களுக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த காட்சிகள் எல்லாம் உங்கள் கவனத்திற்கு வருகிறதா? அதை எல்லாம் நீங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு தயாரா? மக்களுக்கு 520 வாக்குறியை நீங்கள் கொடுத்ததை நம்பித்தான் உங்களுக்கு அதிகாரத்தை வழங்கி இருக்கிறார். மக்களை ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும் மிகப் பெரிய அளவிலே இது ஒரு மோசடியாகத்தான் பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகா கும்பமேளா: ஆற்றில் வீசப்படும் இறந்தவர்களின் உடல்கள்! பகீர் கிளப்பும் ஜெயா பச்சன்!
மகா கும்பமேளா: ஆற்றில் வீசப்படும் இறந்தவர்களின் உடல்கள்! பகீர் கிளப்பும் ஜெயா பச்சன்!
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADGP Kalpana Nayak issue | ADGP கல்பனா அலுவலக தீ விபத்துபேச விடாத எதிர்க்கட்சியினர்! கடுப்பாகி எழுந்த அமைச்சர்! கண்டித்த சபாநாயகர்வளர்ப்பு மகளுக்கு திருமணம்! கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்! தந்தையாக நின்ற தருணம்”முருகனுக்கு அரோகரா” தமிழில் பேசிய மோடி! பூரித்து போன அதிபர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகா கும்பமேளா: ஆற்றில் வீசப்படும் இறந்தவர்களின் உடல்கள்! பகீர் கிளப்பும் ஜெயா பச்சன்!
மகா கும்பமேளா: ஆற்றில் வீசப்படும் இறந்தவர்களின் உடல்கள்! பகீர் கிளப்பும் ஜெயா பச்சன்!
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
John Vs Aadhav :  ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
John Vs Aadhav : ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
Rajasthan Anti Conversion Bill: சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
Embed widget