மேலும் அறிய

சிங்கம்புணரி சமத்துவபுரம் திறக்கப்படுமா? வீணாகும் வீடுகள்..

கட்டிமுடிக்கப்பட்டுள்ள சமத்துவபுரம் திட்டத்தை அப்படியே விட்டுவிடாமல் அமைச்சர் பெரியகருப்பன் உரிய நடவடிக்கை எடுத்து திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சாதிய ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமத்துவம் பிறக்க வேண்டும் என கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பெரியார் சமத்துவபுரம். வீடற்ற ஏழை, எளிய மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒற்றுமையாக வாழவேண்டும் என தமிழகம் முழுவதும் சமத்துவபுரம் அமைத்தார் கலைஞர். இந்த திட்டம் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக நிறைவேறியது. ஆனால் சில இடங்களில் திட்டம் நிறைவேற்றப்பட்டு திறக்கப்படாமலேயே மூடுவிழா கண்டது. அதில் ஒன்று தான் கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 'பெரியார் சமத்துவபுரம்'. தி.மு.க ஆட்சி காலத்தில் திறக்கும் தருவாயில் இருந்து போது ஆட்சி மாற்றத்தால் திறக்கமுடியாமல் போனதால் இப்போது வரை அப்படியே இருக்கிறது. 
 

சிங்கம்புணரி சமத்துவபுரம் திறக்கப்படுமா? வீணாகும் வீடுகள்..
 
 
10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்துள்ள சூழலில் தொகுதி எம்.எல்.ஏ.வும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் இந்த பெரியார் சமத்துவபுரத்தை திறக்க ஏற்பாடு செய்துவருவதாக தகவல் பரவிவருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணமங்கலப்பட்டி ஊராட்சியில் சுமார் 2 கோடி மதிப்பில் பெரியார் சமத்துவபுரம் திட்டம் கொண்டுவரப்பட்டது. 10 ஏக்கர் நிலம் வனத்துறையிடம் இருந்து பெறப்பட்டு காலி இடங்கள் போக சுமார் 6 ஏக்கரில் நூறு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த திட்டம் 2010 -லேயே  80% முடிக்கப்பட்டது.
 

சிங்கம்புணரி சமத்துவபுரம் திறக்கப்படுமா? வீணாகும் வீடுகள்..
 
அதற்கு பின் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.  பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு 2011-ம் ஆண்டே மற்ற பணிகளும் நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு தயாராகியது. வீடுகள் ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்டு திறக்கப்படாமல் மீண்டும் பூட்டு போடப்பட்டது. வீடற்ற ஏழை, எளிய மக்கள் பலரும் குரல் கொடுத்தும் இந்த சமத்துவபுரம் ஆடு மேய்க்கும் இடமாகவும். கம்பு, கேழ்வரகு, கடலை போன்றவை காயவைக்கும் இடமாகவும். சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி கருவேல் மரங்கள் நிறைந்த  புதராக மாறியிருந்தது.
 

சிங்கம்புணரி சமத்துவபுரம் திறக்கப்படுமா? வீணாகும் வீடுகள்..
 
இங்கு பல வீடுகள்  சேதமடைந்தும், கதவுகள் உடைக்கப்பட்டும், மின் கம்பிகள் அறுந்த நிலையிலும் கிடந்தன. ஆங்காங்கே மது புட்டிகள் உடைத்து வீசப்பட்டும் இருந்தன.  இராட்சத தண்ணீர் டேங்கில் சொட்டு தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடந்தது. அரசு அலுவலகமா மாற்ற ஆருடம் செய்யப்பட்ட கட்டிடங்கள் அவலம் நிறைந்து காணப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சமத்துவபுரம் தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் திறக்கப்படலாம் என தகவல் பரவியது. இது குறித்து தெரிந்து கொள்ள அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் பேசினோம். "பெரியார் சமத்துவரம் திறக்க போர்கால அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அங்கு கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ளது. முட்புதர்களை அகற்றி, மராமத்து பணிகள் செய்யவேண்டும். முன்னதாக அதற்கான எஸ்டிமேட் போட்டு, உத்தரவு பெற்று விரைவாக செயல்படுத்தப்படும்" என்றார்.
 

சிங்கம்புணரி சமத்துவபுரம் திறக்கப்படுமா? வீணாகும் வீடுகள்..
 
மேலும் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளஅதிகாரிகள் சிலர்  "இந்த சமத்துவபுரம் அரசு முயற்சி எடுத்து தான் செயல்படுத்த முடியும்.   இந்த சமத்துவபுரத்தை திறக்க பொதுமக்களிடம் முதல்வர் உறுதியளித்ததால் கண்டிப்பாக திறக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன்னதாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சமத்துவபுரத்தில் ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது, அதனால் முதல்கட்டமாக சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். விரைவில் திறப்பது குறித்து ஏற்பாடுகள் நடைபெறும் போது தகவல் தருகிறோம்" என்றார்கள்.
 

சிங்கம்புணரி சமத்துவபுரம் திறக்கப்படுமா? வீணாகும் வீடுகள்..
இது குறித்து சிங்கம்புணரியை சேர்ந்த பொதுமக்கள்,” சிங்கம்புணரியில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தின் தற்போதைய நிலை வயிற்றில் புளியை கரைக்கும். அந்த அளவுக்கு அதன் நிலை மோசமாகிவிட்டது. தொகுதியில் தி.மு.க எம்.எல்.ஏ இருந்தாலும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. தற்போது தி.மு.க ஆட்சி என்பதால் இதனை சரி செய்து கண்டிப்பாக திறக்க முடியும். இதனை அசால்டாக விட்டுவிடாமல் அமைச்சர் பெரியகருப்பன் சூட்டோடு சூடாக சமத்துவபுரத்தை திறந்துவைக்க வேண்டும். இதனால் வீடற்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.
 
படம் - ம. அரவிந்த்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget