மேலும் அறிய

Vaiko : கோவை சம்பவத்தில் முதலமைச்சர், டி.ஜி.பி. மின்னல் வேகத்தில் செயல்பாடு - வைகோ பாராட்டு

ஆளுநர் சனாதனம் என உளறுகிறார்- கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் முதல்வர் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 60-வது குருபூஜை விழா மற்றும் 115-வது ஜெயந்தி விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார்.
 
தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்து பேசுகையில், "கோவை குண்டுவெடிப்பு சம்பவம் போல உலகத்தில் பல்வேறு நாடுகளில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன. நுண்ணிய அறிவும் கண்டுபிடிப்பும் கொண்டிருக்கக் கூடிய மேல் நாடுகளில் அது போன்ற சம்பவகள் நடைபெற்றது என்றால் அங்கே எல்லாம் உளவுத்துறை கெட்டுப் போய்விட்டது, உளவுத்துறை கடமை தவறி விட்டது என்று சொல்ல முடியுமா?

Vaiko : கோவை சம்பவத்தில் முதலமைச்சர், டி.ஜி.பி. மின்னல் வேகத்தில் செயல்பாடு - வைகோ பாராட்டு
 
கோவை சம்பவத்தில் மின்னல் வேகத்தில் முதல்வர், டிஜிபி சைலேந்திரபாபு குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து, அடையாளம் தெரியாமல் கருகிப் போய் இருந்த உடலை வைத்து இவர் தான் சம்பந்தப்பட்ட நபர் என்று கண்டுபிடித்து, ஆதாரங்களை தேடி எடுத்து என்.ஐ.ஏ.க்கு அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். தமிழ்நாடு காவல்துறை தன்னுடைய கடமையை சிறப்பாக செய்திருக்கிறது.
 
கோவையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் என்ன கடமைகளை செய்ய வேண்டுமோ அவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் மிகச்சிறப்பாக செய்துள்ளார். அதன் காரணமாக பல விஷயங்கள் வெளியே வந்துள்ளன. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் காவல்துறை மாநில அரசு மிகத்திறமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசியல் காரணங்களுக்காக வீணாக அவதூறாக சில பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் புறக்கணிக்கப்பட வேண்டியவை." என்றார்.

Vaiko : கோவை சம்பவத்தில் முதலமைச்சர், டி.ஜி.பி. மின்னல் வேகத்தில் செயல்பாடு - வைகோ பாராட்டு
 
ஆளுநரின் சனாதன தர்மம் குறித்த கேள்விக்கு, "ஆளுநர் மாதிரி ஒரு உளறல் வாதியை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை. ஆளுநர் உளறிக்கிட்டே இருக்கிறார். சனாதன தர்மம் தான் இந்த நாட்டினுடைய இலக்கியம் என்கிறார், சனாதனம் என திருக்குறளை சொல்கிறார். ஆளுநர் முழுக்க முழுக்க ஒரு சனாதன வாதியாக மாறி இந்துத்துவா பிரச்சாரகராக மாறிவிட்டார். அவரை இங்கே கொண்டு வந்து போட்டு வைத்திருக்கிறார்கள். அவருடைய உளறலுக்கு கணக்கே இல்லை" என பேசினார்.

Vaiko : கோவை சம்பவத்தில் முதலமைச்சர், டி.ஜி.பி. மின்னல் வேகத்தில் செயல்பாடு - வைகோ பாராட்டு
 
திமுக ஆட்சியில் உள்ளதால் எதிர்க்கட்சிகள் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பேசவில்லையா என்ற விமர்சனம் குறித்து, 24 மணி நேரத்தில் கடமையைசெய்து குற்றவாளிகளை காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது. வயது மூப்பு காரணமாக ஆளுநரை உளறல்வாதி என்பதற்கு பதிலாக ஊழல்வாதி என்றார். வைகோ முதலில் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்ததால், சசிகலா செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்றார்.
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget