தேனி: 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு தீவிரம்! பதற்றமான வாக்குச்சாவடிகளில் ராணுவப் படை குவிப்பு!
வாக்குப்பதிவு நாளன்று சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் மாநில காவல்துறையினருடன் இணைந்து இந்த மத்திய பாதுகாப்புப் படையினர் முக்கியப் பங்காற்றுவார்கள்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்க தொடங்கி அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று தமிழகத்தில் எதிர்வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையமும் காவல்துறை நிர்வாகமும் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்த தெலுங்கானாவில் இருந்து மத்திய பாதுகாப்பு படையினர் வருகை தந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தேனியில் உள்ள பகுதிகளில் தேர்தல் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தெலுங்கானாவில் இருந்து ஆய்வாளர் ஹர்மான் கட்கட்டா தலைமையில் ராணுவ படையினர் 39 (CRPF) பேருடன் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் தேனியில் உள்ள பதற்றமான வாக்குசாவடி பகுதிகள் மற்றும் தேர்தல் தொடர்பான முக்கியப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது, தேர்தல் பாதுகாப்புப் பணியின் போது வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. களத்தில் நடுநிலையோடும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன. கண்டறியப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்புப் பாதுகாப்புப் பணிகள் மற்றும் அங்கிருக்கும் சவால்களைக் கையாளுதல் குறித்து விளக்கப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு செல்வது மற்றும் வாக்குப்பதிவு முடிந்த பிறகு அவற்றை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் (Strong Room) ஒப்படைக்கும் வரை மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களிடையே தேர்தல் குறித்த அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் கொடி அணிவகுப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
வாக்குப்பதிவு நாளன்று சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் மாநில காவல்துறையினருடன் இணைந்து இந்த மத்திய பாதுகாப்புப் படையினர் முக்கியப் பங்காற்றுவார்கள். இதன் மூலம் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியை ஏடிஎஸ்பி மகேஷ் கொடியைசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி தேனி அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவில் இருந்து பொம்மையா கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் இருந்து அல்லிநகரம், நேரு சிலை, பழைய பேருந்து நிலைய நேரு சிலை வழியாக பங்களா மேடு பகுதி வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது























