மேலும் அறிய

திண்டுக்கல்: அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - குழந்தை உட்பட 3 பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பண்ணைப்பட்டி அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து. சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட மூவர் பலி. 6 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பண்ணைப்பட்டி அருகே உள்ள செம்பட்டி ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில்  கேரள திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் காரில் பழனிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர். காரை கேரள மாநிலம் கரமணையை சேர்ந்த கண்ணன் என்பவர் ஒட்டி வந்தார். காரில் அபிஜித் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.


திண்டுக்கல்: அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - குழந்தை உட்பட 3 பேர் பலி

கார் T.பண்ணைப்பட்டி அருகே வரும் போது காரின் டயர் வெடித்ததில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரை தாண்டி சென்று எதிரே பழனியில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் காரில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

மேலும் 7 பேர் பேர் பலத்த காயத்துடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உதவியுடன் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனை மற்றும் ஒட்டன்சத்திரம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  


திண்டுக்கல்: அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - குழந்தை உட்பட 3 பேர் பலி

சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தது. விபத்து குறித்து கன்னிவாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வத்தலகுண்டு அருகே செயினை பறித்த கொள்ளையர்களை துடைப்பதால் அடித்து விரட்டி பிடிக்க முயன்ற மூதாட்டி  

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த கோட்டை என்பவர் மனைவி முருகாயம்மாள் 75 வயதை கடந்த இவர் காலை வீட்டின் முன்பு வாசல் பெருக்கிக் கொண்டிருந்தார் அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் முருகாயம்மாள் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.


திண்டுக்கல்: அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - குழந்தை உட்பட 3 பேர் பலி

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட  புகாரின் அடிப்படையில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மூதாட்டியிடம் வழிப்பறி கொள்ளையர்கள் செயினை பறிக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது மூதாட்டி வாசலை துடைப்பத்தால் பெருக்கிக் கொண்டிருக்கும் போது நோட்டமிடும் கொள்ளையர்கள் வீதியில் யாரும் இல்லாததை அறிந்து திடீரென மூதாட்டியின் அருகே வந்து அவர் திரும்பி இருந்த நேரம் பார்த்து கழுத்தில் இருந்த செயினை பறித்தனர் திடுக்கிட்ட மூதாட்டி நிலை தடுமாறாமல் கையில் இருந்த துடப்பத்தை கொண்டு செயினை பறித்த கொள்ளையனை அடிக்க தொடங்குகிறார்.


திண்டுக்கல்: அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - குழந்தை உட்பட 3 பேர் பலி

அடி வாங்கிய கொள்ளையர்கள் வேகமாக வண்டி எடுத்து தப்பியோட மூதாட்டி அவர்களை துடைப்பத்தோடு  விரட்டும் பரபரப்பான காட்சிகள் பதிவாகியுள்ளன தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் சிசிடிவி காட்சி கொண்டு  கொள்ளையர்களை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget