ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ஜூலை 1, 2025 முதல், தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயனர்கள் OTP ஐ வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் செல்லும் பயணிகளுக்கு ஏற்ற வகையில் மற்றொரு செய்தி இந்தின் ரயில்வே நிர்வாகம் வெளியிடப் போகிறது. அதன்படி டிக்கெட் கட்டணம் ரத்து செய்வதற்கான எழுத்தர் கட்டணத்தை குறைப்பது அல்லது முற்றிலுமாக நீக்குவது குறித்து ரயில்வே பரிசீலித்து வருகிறது. தற்போதைய முறையின்படி, இரண்டாம் வகுப்பு முன்பதிவில் ரூபாய் 60 வரை எழுத்தர் கட்டணமாக பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது, அதே நேரத்தில் இந்தக் கட்டணம் இரண்டாம் வகுப்பு முன்பதிவில் ரூபாய் 30 ஆகும்.
எனினும், தற்போது பெரும்பாலான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதன் காரணமாக ரயில்வேயின் நிர்வாகச் செலவுகள் முன்பை விட சற்று குறைந்துள்ளன. இதன் காரணமாக, இந்த கூடுதல் கட்டணங்களை ரயில்வே நீக்க தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் பயணிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகள் பெறலாம்.
இதனிடையே கடந்த ஜூலை 1, 2025 முதல் ரயில்களின் கட்டணத்தை ரயில்வே அதிகரித்துள்ளது. பயணிகளுக்கான அதிகபட்ச கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கும் என்று ரயில்வே அறிவித்து இருந்தது. ஜெனரல் ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் முதல் வகுப்புக்கான கட்டணம் கிலோமீட்டருக்கு 50 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் ஏசி அல்லாத ரயில்களின் கட்டணம் கிலோமீட்டருக்கு 1 பைசா அதிகரிக்கும். இது தவிர, ஏசி வகுப்பில் கிலோமீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர சீசன் டிக்கெட்டுகள் மற்றும் உள்ளூர் ரயில்களின் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை, இது தினசரி பயணிகளுக்கு ஏற்ற வகையில் அமையும். இது தவிர, முன்பதிவு கட்டணம் மற்றும் சூப்பர்ஃபாஸ்ட் கூடுதல் கட்டணம் போன்ற பிற கட்டணங்களும் முன்பு போலவே இருக்கும். அதே நேரத்தில், புறநகர் ரயில்களின் கட்டணத்திலும் மாற்றம் இல்லை. டிக்கெட் ஏஜெண்டுகளை கட்டுப்படுத்த, ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளையும் மாற்றி தற்போது கடந்த ஜூலை 1, 2025 முதல், தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயனர்கள் OTP ஐ வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜூலை 15 முதல் OTP அடிப்படையிலான தட்கல் டிக்கெட் முன்பதிவு கட்டாயமாக்கும்.
பயணிகளின் வசதி மற்றும் அனுபவத்தை மேம்படுத்த இந்திய ரயில்வே தற்போது மற்றொரு முடிவை எடுத்துள்ளது. ரயில்வே துறையின் வட்டாரங்களின்படி, பயணிகள் சீர்திருத்தங்களின் கீழ், வெயிட்டிங் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையில் வரம்பை விதிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இப்போது ரயில்களில் அதிகபட்சமாக 25 சதவீத வெயிட்டிங் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும், அதாவது, முன்பை விட தற்போது வெயிட்டிங் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. PPM (பயணிகள் சுயவிவர மேலாண்மை) அமைப்பின் கீழ் பயணிகளின் தரவை பகுப்பாய்வு செய்த பின்னர் ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது. இதில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் பிற ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ரயில்களின் முன்பதிவு, ரத்து செய்தல் மற்றும் வெயிட்டிங் முறை புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.





















