மேலும் அறிய
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி விரிசல்: எம்.எல்.ஏ-எம்.பி இடையே மோதல்.. சீட் பிரச்னையில் வெடிக்கும் கருத்து வேறுபாடு?
திமுக - காங்கிரஸ் கூட்டணியிடையே விரிசலா? - திமுக எம்.எல்.ஏ - காங்கிரஸ் எம்.பி. இடையே கருத்து மோதல்.

திமுக கூட்டணிக்கு வேட்டு?
Source : whatsapp
பூத் கமிட்டி போட ஆள் இல்லாத காங்கிரஸ் கட்சி, திமுக இல்லனா இந்தியா கூட்டணியே இல்ல, திமுக தலைமை காங்கிரஸ்க்கு சீட் கொடுக்ககூடாது கொடுத்தாலும் நம்ம ஆளுக அதற்கான வேலைய பாத்துரனும் - காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்ற தொனியில் பேசிய வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ தளபதி. தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என காங் எம்.பி. மாணிக்தாகூர் X தளத்தில் பதிவு.
திமுக எம்.எல்.ஏ., காரசார பேச்சு
மதுரை மாநகர் திமுக சார்பில் சுப்பிரமணியபுரம் பகுதியில் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மதுரை மாநகர் திமுக மாவட்ட செயலாளரும், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி...,” காங்கிரஸை சேர்ந்த மாணிக்தாகூர், ஜோதிமணி அவர்கள் MPயாக ஆகிவிட்டார் இனி யாரும் mla ஆனா என்ன ஆகலைனா என சொல்லி அதுல பங்கு வேணும், இதுல பங்கு வேணும் என சொல்றாங்க இதையெல்லாம் தலைமை புரிஞ்சு அடுத்து இவனுகளுக்கு சீட்டே குடுக்ககூடாது, காங்கிரஸ்க்கு நம்மலே சீட் கொடுக்க விடக்கூடாது இல்லனா அதுக்கான வேலைய நம்ம ஆளுகளே பார்ப்பார்கள் என (காங்கிரஸை உள்ளடி வேலை பார்த்து தோற்கடிக்கனும் என்பது போல பேசினார்).
மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது என்றார்.
நம்ம இல்லைனா இந்திய கூட்டணியே கிடையாது. இந்தியா கூட்டணியில் டெல்லியில் இருக்குதுனா அதுக்கு காரணம், ஸ்டாலின் மம்தா பானர்ஜி என ராகுலை கேலி செய்யும் வகையில் பேசினார். இன்னும் சொல்ல பல விவகாரங்கள் உள்ளது. அதனை எல்லாம் கூறினால், நல்லதல்ல தப்பாக போய்விடும். ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம் ஓட்டுதான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பது தான் நம் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது என்றார்.
நம்ம இல்லைனா இந்திய கூட்டணியே கிடையாது. இந்தியா கூட்டணியில் டெல்லியில் இருக்குதுனா அதுக்கு காரணம், ஸ்டாலின் மம்தா பானர்ஜி என ராகுலை கேலி செய்யும் வகையில் பேசினார். இன்னும் சொல்ல பல விவகாரங்கள் உள்ளது. அதனை எல்லாம் கூறினால், நல்லதல்ல தப்பாக போய்விடும். ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம் ஓட்டுதான் இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்தளவுக்கு பேசுகிறார்கள் என்பது தான் நம் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது என்றார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்படுகிறதா?
இதற்கு பதிலளிக்கும் வகையில் விருதுநகர் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...,” இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது எனவும், Typo Error-கட்சிகள்
முடிந்து விட்டது எனவும் பதிவிட்டுள்ளார். திமுக தங்களது ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிவந்த நிலையில் தற்போது நேருக்கு நேராக கருத்துமோதல்களை வெளிப்படுத்திவருவது திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























