மேலும் அறிய

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் விவகாரம்: உதவி ஆணையர் சண்முகம் பணியிலிருந்து நீக்கம்!

உதவி ஆணையர் சண்முகத்தை மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையர் பணியிலிருந்து விடிவித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். 

மதுரைக்கு வருகை தரும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் வருகையொட்டி சில ஏற்பாடுகளை செய்து தர மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்...

மாநகராட்சி உதவி ஆணையாளர் (பணியமைப்பு) சண்முகம் உத்தரவில், 
’மதுரை மாநகராட்சி மண்டலம் - 4 சத்யசாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் RSS தலைவரான திரு.மோகன்பகவத் அவர்கள் 22.07.2021 முதல் 26.07.2021 வரை நேரில் கலந்து கொள்ள உள்ளார்.
எனவே அன்னாரின் வருகையை முன்னிட்டு விமானநிலையத்தில் இருந்து அன்னார் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளில்

 

1. சாலைகளை சீரமைத்தல்,
2. தெரு விளக்குகளை பராமரித்தல், 
3. சாலைகளை சுத்தமாக வைத்தல், போன்ற பணிகளை செய்திடவும்
4. அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் மாநகராட்சிப் பணிகளான சீரமைப்பு பணிகள் ஏதும் நடைபொறாமல் இருப்பதை கண்காணித்தல். போன்ற பணிகளை கவனித்து 'வா அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது’ என்று, அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து ஏபிபி நாடு சார்பில் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் கேட்ட போது....

மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயனிடம் ABP நாடு சார்பில் கேட்டோம். அவர்,’அரசால் Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்ட நபர்களுக்கு வழக்கமான பாதுகாப்பு எப்போதும் மாநகராட்சியால் தரப்படுவதுதான். அதன் அடிப்படையிலேயே தற்போது மோகன் பகவத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.மற்றபடி அவருக்காக என்று சிறப்பு நடவடிக்கைகள் எதுவும் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படவில்லை’ என மறுத்துள்ளார். 

மேலும் அவர், ‘உதவி ஆணையாளர் அனுப்பிய சுற்றறிக்கை (Circular) யாரிடமும் அனுமதி கேட்காமல் அனுப்பிவிட்டார். அந்த சுற்றறிக்கைத் தேவையற்றதுதான்’ எனக் கூறினார்.  
 
இதற்கிடையில் மாநகராட்சி சார்பில் சம்மந்தப்பட்ட உதவி ஆணையரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் சார்பில் ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில்....
மதுரை மாநகராட்சி உதவி ஆணையர்(பணியமைப்பு) 20.7.2021 தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான விளக்கம்: ‛இஜட் பிளஸ்’ பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர்கள் பயணம் செய்யும் போது அது தொடர்பான விதிகளின் படி பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கமாக சில முன்னேற்பாடுகள் செய்யப்படும். அதன் அடிப்படையில் மட்டுமே விதிமுறைகளின் படியான பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றன. சிறப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கமான நிர்வாக நடைமுறைகளின் படி உயர் அலுவலர்கள் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக, தவறுதலாக புரிந்து கொள்ளப்படும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. 
இந்நிலையில் தற்போது சம்மந்தப்பட்ட அலுவலர் சண்முகத்தை மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையர் பணியிலிருந்து விடிவித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். 
 

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் விவகாரம்: உதவி ஆணையர் சண்முகம் பணியிலிருந்து நீக்கம்!
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Embed widget