மேலும் அறிய

Crime: பழனி அருகே இளைஞர் அடித்துக் கொலை; ஆற்றுப்பாலத்தில் வீசப்பட்ட சடலம் - நடந்தது என்ன?

பழனி அருகே 20 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர் அண்ணாநகரை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் சிவக்குமார் வயது 20. இவர் அப்பகுதியில் தினசரி வேலைகளுக்கு சென்று வருபவர். இவர் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் சிவக்குமார் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

Solar Eclipse: இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம்.. 178 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அதிசயம் என்ன?

Crime: பழனி அருகே இளைஞர் அடித்துக் கொலை; ஆற்றுப்பாலத்தில் வீசப்பட்ட சடலம் - நடந்தது என்ன?

இளைஞர் உயிரிழப்பு:

இந்தநிலையில் நேற்று காலை மானூர் சண்முகநதி ஆற்றுப்பால பகுதியில் சிவக்குமார் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதனை அறிந்ததும் அவரது பெற்றோர், உறவினர்கள் அங்கு சென்றனர். அப்போது சடலமாக கிடந்த மகனை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து கீரனூர் காவல் நிலைய  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு சிவக்குமாரின் தலை, முகம் ஆகிய இடங்களில் ரத்த காயம் இருந்தது. இதையடுத்து சிவக்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று மஹாளய அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் ராமேஸ்வரம், ஒகேனக்கலில் குவியும் பக்தர்கள்..!


Crime: பழனி அருகே இளைஞர் அடித்துக் கொலை; ஆற்றுப்பாலத்தில் வீசப்பட்ட சடலம் - நடந்தது என்ன?

அடித்துக் கொலை:

பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சிவக்குமாரை மர்மகும்பல் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, சண்முகநதி ஆற்றுப்பால பகுதியில் வைத்து சிவக்குமாரை கொலை செய்தார்களா? அல்லது வேறு பகுதியில் வைத்து கொலை செய்துவிட்டு உடலை சண்முகநதி பாலத்தில் வீசி சென்றார்களா? என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மானூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Breaking News LIVE:
Breaking News LIVE: "நீக்கப்பட்ட உரையை அவைக் குறிப்பில் சேர்த்திடுக” - சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Breaking News LIVE:
Breaking News LIVE: "நீக்கப்பட்ட உரையை அவைக் குறிப்பில் சேர்த்திடுக” - சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
ITR Filing: ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?
ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?
Pani Puri: பானிபூரியில் புற்றுநோய் அபாயமா? வெளியான அதிர்ச்சி தகவல்..
Pani Puri: பானிபூரியில் புற்றுநோய் அபாயமா? வெளியான அதிர்ச்சி தகவல்..
Side Effects OF AC: ஆத்தாடி..! ஏசி பயன்படுத்தினால் இவ்வளவு பிரச்னைகளா? உஷாரா இருங்க மக்களே..!
ஆத்தாடி..! ஏசி பயன்படுத்தினால் இவ்வளவு பிரச்னைகளா? உஷாரா இருங்க மக்களே..!
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Embed widget