மேலும் அறிய

’நீதிபதி சரமாரி கேள்வி’ ஆஜகராகவில்லையெனில் அவ்வளவுதான் - கலெக்டருக்கு எச்சரிக்கை..!

திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் குவாரி தொடர்பான வழக்கில், அம்மாவட்ட கலெக்டருக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி ஆற்று மணல் மற்றும் கிராவல் மணல் அகழ்வு நடைபெறும் விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்படுவதில் அதிகாரிகளின் பங்கு குறித்து நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளனர்.


’நீதிபதி சரமாரி கேள்வி’ ஆஜகராகவில்லையெனில் அவ்வளவுதான் - கலெக்டருக்கு எச்சரிக்கை..!

மணல் குவாரி சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் மணல் மற்றும் கருங்கற்கள் தோண்டுதல் நடைபெற்று, தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளி கொண்டு செல்லப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் குறைந்து, அரசு பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு சீல் வைக்க உத்தரவு

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சட்டவிரோத மணல் குவாரிகள் உடனடியாக மூடி சீல் வைக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் குவாரி நடத்தியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கனிம வளம் நமது நாட்டின் சொத்து, அதை திருட அனுமதிக்க கூடாது என கடுமையாக எச்சரிக்கை வழங்கினர். 

இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜராகிய அரசு வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட குவாரிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத குவாரி நடத்தியவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று விளக்கம் அளித்தார். ஆனால் மனுதாரர் தரப்பில் வாதம் நடத்திய வழக்கறிஞர், முன்பக்கம் மட்டுமே சீல் வைக்கப்பட்டு, பின்பக்கம் வழியாக மணல் அள்ளப்படுகிறது என புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.


’நீதிபதி சரமாரி கேள்வி’ ஆஜகராகவில்லையெனில் அவ்வளவுதான் - கலெக்டருக்கு எச்சரிக்கை..!

நீதிபதி சரமாரி கேள்வி

அப்போது, இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கின்றனவா? அல்லது வேறு விதமாக நடக்கின்றனவா? அதிகாரிகளின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த குற்றச்சாட்டுகள் கடுமையானவை. அத்துடன், மாவட்ட நிர்வாகம் முழுமையாக நிலைமையை விளக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி முழு விபரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகி, உண்மையை விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.


’நீதிபதி சரமாரி கேள்வி’ ஆஜகராகவில்லையெனில் அவ்வளவுதான் - கலெக்டருக்கு எச்சரிக்கை..!

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை எதிர்த்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றன. அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமா? சட்டவிரோத குவாரிகள் மூடி சீல் வைக்கப்பட்டு நிறுத்தப்படுமா? என்பதைக் காலம் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் பல பகுதிகளில் இதுபோன்று சட்டவிரோத குவாரிகள் செயல்படுகின்றன. அவற்றை அரசு அதிகாரிகள் கையூட்டு பெற்று கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா். குறிப்பாக தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகளவு குவாரிகள் செயல்படுகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget