மேலும் அறிய

நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்

நீட், ஜேஇஇ தாண்டி... உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்

தேசிய கல்விக் கொள்கை மறு ஆய்வுக் குழுவின் தலைவரும், யுஜிசி முன்னாள் தலைவரும் ஐஐஎம் கல்கத்தாவின் ஆளுநர் குழுத் தலைவருமான ஜெகதீஷ் குமார், நீட், ஜேஇஇ மற்றும் கியூட் போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகள் இந்திய உயர்கல்வியின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

எனினும், பெரும்பாலான இளங்கலை மாணவர் சேர்க்கைகள் மாநில, பல்கலைக்கழக மற்றும் நிறுவன நடைமுறைகள் மூலமாகவே நடைபெறுகின்றன.

ஒரு பொதுவான தேசியத் தேர்வால், தேர்வு நடத்தும் முறையை மட்டுமே மையப்படுத்த முடியுமே தவிர, ஒட்டுமொத்த சேர்க்கை செயல்முறையையும் மையப்படுத்த முடியாது.

தேர்வை யார் நடத்துகிறார்கள் என்பதைத் தாண்டி, தகுதி மற்றும் தரவரிசைப் பட்டியல்களை யார் தீர்மானிக்கிறார்கள், கலந்தாய்வை நடத்தி மாணவர்களை யார் சேர்க்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்று ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

, டெல்லி ஐஐடி முன்னாள் பேராசிரியருமான இவர், எக்ஸ் தளத்தில் 'நீட் மற்றும் ஜேஇஇக்கு அப்பால்: இந்திய உயர்கல்வி உண்மையிலேயே மையப்படுத்தப்பட்டுள்ளதா?' என்ற கட்டுரையைப் பகிர்ந்து, உயர்கல்வியின் பிரம்மாண்ட அளவே பல்வேறு சேர்க்கை முறைகளுக்குக் காரணம் என்றார்.

AISHE 2023-24 அறிக்கையின்படி, இந்தியாவில் 3.46 கோடி இளங்கலை மாணவர்கள் உட்பட மொத்தம் 4.5 கோடி பேர் உயர்கல்வி பயில்கின்றனர். 5.69 லட்சம் பேர் ஒருங்கிணைந்த யுஜி பிஜி படிப்புகளிலும், 1.09 கோடி பேர் பல்கலைக்கழகங்களில் யுஜி, பிஜி, பிஎச்டி அளவிலும் படிக்கின்றனர். 1,289 பல்கலைக்கழகங்கள், 48,246 கல்லூரிகள், 15,221 தனித்த நிறுவனங்கள் உள்ளதால் சேர்க்கைக்கு பல வழிகள் தேவைப்படுகின்றன. மாநில கவுன்சிலிங், போர்டு மதிப்பெண்கள், நிறுவன தரவரிசைகளே அதிகம் பயன்படுவதால், இதனை முழுமையாக மையப்படுத்தப்பட்ட அமைப்பு என கூறமுடியாது என விளக்கினார்.

நீட், ஜேஇஇ, கியூட் ஆகியவை ஒரே மாதிரியாக செயல்படவில்லை. இளங்கலை மருத்துவச் சேர்க்கைக்கான சட்டபூர்வ தேர்வான நீட்டை மத்திய, மாநில, தனியார், நிகர்நிலை நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. மருத்துவக் கலந்தாய்வுக் குழு தேசிய இடங்களை நிர்வகிக்கிறது. மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான இடஒதுக்கீடு, இருப்பிட தகுதி விதிகளை மாநில அதிகாரிகளே முடிவு செய்கின்றனர்.

ஐஐடிகள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வையும் என்ஐடி மற்றும் ஐஐஐடி நிறுவனங்கள் ஜேஇஇ மெயின் தேர்வையும் பயன்படுத்துகின்றன. ஜோசா (JoSAA) இடங்களை ஒதுக்குகிறது. சில மாநிலங்கள் ஜேஇஇ மெயின் மதிப்பெண்களைத் தாங்களே சொந்தமாகப் பயன்படுத்துகின்றன; இதை என்டிஏ ஒதுக்குவதில்லை. இவை கட்டாய தேவையுமல்ல.

இதேபோல், கியூட் நுழைவுத் தேர்விலும் பங்கேற்கும் பல்கலைக்கழகங்களே சேர்க்கையை முடிவெடுக்கின்றன. பல்வேறு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இதை பல வழிகளில் ஒன்றாகவே பயன்படுத்துகின்றன. கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களில் பொறியியல் மற்றும் பிற படிப்புகளுக்குத் மாநில அளவிலான தனி நுழைவுத் தேர்வுகள் உள்ளன. எனவே, இந்தியா சில சேர்க்கைக்கு மட்டுமே தேசிய தேர்வுகளையும், மற்றவற்றுக்குப் பரவலாக்கப்பட்ட நடைமுறைகளையுமே பின்பற்றுகிறது என்றும் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget