மேலும் அறிய

பீகார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு 2025

(Source:  Matrize IANS)

தேனி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! சென்னை- போடி ரயில் நேரம் மாற்றம்: புதிய அட்டவணை இதோ!

சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் ஏசி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20601/20602) ரயிலின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் ஏசி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20601/20602) ரயிலின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி புதிய மாற்றப்பட்ட அட்டவணை இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வருகிறது என தெற்கு  ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த மாற்றம் மூலம், போடிநாயக்கனூர் – சென்னை இடையிலான பயண நேரம் சுமார் 15 நிமிடம் வரை குறைகிறது. இதனால் பயணிகள் விரைவாகவும் சீரான முறையிலும் தங்கள் பயணத்தை முடிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தேனி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! சென்னை- போடி ரயில் நேரம் மாற்றம்: புதிய அட்டவணை இதோ!

புதிய அட்டவணைப்படி, சென்னை சென்ட்ரலிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முந்தையதை விட முன்னதாக புறப்படும். அதேபோல் போடிநாயக்கனூரில் அதன் வருகை நேரமும் முன்னதாக அமையும். சென்னையிலிருந்து புறப்படும் நாள் திங்கள், புதன், வெள்ளி என்று இருக்கும். போடிநாயக்கனூரிலிருந்து புறப்படும் நாள் ஞாயிறு, செவ்வாய், வியாழன் என அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலிலிருந்து இந்த ரயில் திங்கள், புதன், வெள்ளி நாட்களில் இரவு 10.30 மணிக்கு புறப்படும். புதிய அட்டவணையில் சுமார் 15 நிமிடம் முன்னதாகவே புறப்படும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதேபோல் போடிநாயக்கனூர் வருகை நேரமும் 9.35 மணி என்பதில் இருந்து 9.10 மணி ஆக குறைக்கப்பட்டுள்ளது.இந்த சேவை வாரத்தில் ஆறு நாள் இயக்கப்படும். ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தபடி, இந்த நேர மாற்றம் பயணிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போடி – மதுரை பாதையில் மின்மயமாக்கப்பட்டுள்ளதால் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் முழு பாதையில் பயண நேரம் குறைக்க முடிந்தது.


தேனி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! சென்னை- போடி ரயில் நேரம் மாற்றம்: புதிய அட்டவணை இதோ!

மதுரை–போடிநாயக்கனூர் இடையிலான பாதை முன்னர் மீட்டர் கேஜ் ஆக இருந்தது. அதனை அகலமான கேஜ் வழியாக மாற்றும் பணி நீண்ட காலமாக நடைபெற்றது. பல ஆண்டுகள் இடைநீட்டங்கள் ஏற்பட்டாலும், 2022–இல் உசிலம்பட்டி வரை ரயில் சேவை தொடங்கியது. அதன் பின்னர் 2023–இல் போடிநாயக்கனூர் வரை சேவை நீட்டிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களில் மின்மயமாக்கும் பணி முடிந்து, ஏப்ரல் மாதம் முதல் மின் ரயில் சேவை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றப்பட்ட நேர அட்டவணை பயணிகள் நலன் கருத்தில் கொண்டு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டதால், பயணிகள் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தி பயணிக்க முடியும். மேலும் சுற்றுச்சூழல் நட்பு மின் ரயில் சேவை மூலம் கார்பன் உமிழ்வை குறைக்கும் வகையிலும் இது பயன்படும். தேனி மாவட்ட மக்களுக்கு சென்னை செல்ல ஒரு நேரடி மற்றும் வசதியான வசதி இதுவரை இல்லாத நிலை இருந்தது. புதிய அட்டவணை மூலம் அவர்கள் விரைவில் சென்னையை அடைய முடியும். தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் இது மிகப் பெரிய நன்மை தரும் என கூறப்படுகிறது. இந்த மாற்றப்பட்ட அட்டவணை உடனே நடைமுறைக்கு வந்துவிட்டதால், பயணிகள் முன்பே முன்பதிவு செய்து பயணத்தினை திட்டமிட்டு பயணிக்கும்படி தென்னக ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Election Record Polling: பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
Bihar Election 2nd Phase: பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
குடும்பத்தையே பிரித்த ஆதவ் ஆர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
குடும்பத்தையே பிரித்த ஆதவ் ஆர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
TVK VIJAY: விஜய்க்கு கிடைக்கப்போவது இந்த சின்னமா.?  தேர்தல் ஆணையத்தில் லிஸ்ட்டை கொடுத்த தவெக
விஜய்க்கு கிடைக்கப்போவது இந்த சின்னமா.? தேர்தல் ஆணையத்தில் லிஸ்ட்டை கொடுத்த தவெக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Terrorist Umar Mohammed Profile| பாகிஸ்தானின் SLEEPER CELL பழிதீர்க்க வந்த பயங்கரவாதியார் இந்த உமர்?
Delhi Car Blast CCTV | டெல்லி கார் குண்டு வெடிப்புபின்னணியில் காஷ்மீர் மருத்துவர்?சிசிடிவி காட்சிகள்
ஆட்டோ, விசில், பேட்... விஜய்யின் 10 சின்னம்! தேர்தல் ஆணையத்தில் தவெக
மழைக்கு ரெடியா? நவம்பர் நிலைமை என்ன?வெதர்மேன் அப்டேட்
Delhi Car Blast | செங்கோட்டை அருகேவெடித்து சிதறிய கார்பதற்றத்தில் டெல்லி!பரபரப்பு காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Election Record Polling: பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
Bihar Election 2nd Phase: பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
குடும்பத்தையே பிரித்த ஆதவ் ஆர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
குடும்பத்தையே பிரித்த ஆதவ் ஆர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
TVK VIJAY: விஜய்க்கு கிடைக்கப்போவது இந்த சின்னமா.?  தேர்தல் ஆணையத்தில் லிஸ்ட்டை கொடுத்த தவெக
விஜய்க்கு கிடைக்கப்போவது இந்த சின்னமா.? தேர்தல் ஆணையத்தில் லிஸ்ட்டை கொடுத்த தவெக
SC on SIR Ban: SIR-க்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு; பணிகள் தொடரலாம் - உச்சநீதிமன்றம்
SIR-க்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு; பணிகள் தொடரலாம் - உச்சநீதிமன்றம்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Tasmac: மதுப்பிரியர்களுக்கு குஷி.! இனி ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்க முடியாது- டாஸ்மாக்கில் அசத்தலான திட்டம் அறிமுகம்
மதுப்பிரியர்களுக்கு குஷி.! இனி ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்க முடியாது- டாஸ்மாக்கில் அசத்தலான திட்டம் அறிமுகம்
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு; 12 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை- அமித்ஷா தலைமையில் அவசரக்கூட்டம், உறுதியளித்த ராஜ்நாத்!
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு; 12 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை- அமித்ஷா தலைமையில் அவசரக்கூட்டம், உறுதியளித்த ராஜ்நாத்!
Embed widget