மேலும் அறிய

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேடசந்தூர் பகுதியில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

ஏற்கனவே இரண்டு அமைப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளதால் இதற்கு அனுமதி வழங்குவது காவல்துறைக்கு சிரமத்தையே ஏற்படுத்தும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேடசந்தூர் பகுதியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் ஊர்வலம் நடத்தவும் அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் வேடசந்தூரை சேர்ந்த மணிகண்ட பிரபு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்து தமிழர் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவராக இருக்கிறேன். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வேடசந்தூர்  பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைக்க திட்டமிட்டுள்ளோம். 31 ஆம் தேதி விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து செப்டம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று வேடசந்தூர் காலணி வழியாக கடைவீதி, பேருந்து நிலையம், போலீஸ் லைன் வழியாக அடைக்கனுர் குடகனாற்றுப் பகுதியில் சிலையை கரைக்க திட்டமிட்டுள்ளோம்.

இதற்கு அனுமதி கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் தற்போது வரை எவ்விதமான முடிவும் வழங்கப்படவில்லை.  ஆகவே, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேடசந்தூர் பகுதியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் தொடர்ச்சியாக செப்டம்பர் 1, 2ஆம் தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." எனக் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஏற்கனவே மனுதாரர் கோரும் இடத்தில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மனுதாரர் குறிப்பிடும் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர் அல்ல என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு அமைப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளதால் இதற்கு அனுமதி வழங்குவது காவல்துறைக்கு சிரமத்தியே ஏற்படுத்தும் எனக்கு கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget