மேலும் அறிய

தாமிரபரணி ஆற்றின் பெயர் மாற்றம் வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மொழியியல் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன்  பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யக்கோரிய வழக்கில், மொழியியல் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன்  பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துகுடியைச் சேர்ந்த பொன்காந்திமதிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் " பொதிகை மலையில் உற்பத்தியாகி, நெல்லை மாவட்டம் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலப்பது தாமிரபரணி ஆறு. தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். தாமிரபரணி ஆறு முன்னதாக பொருநை நதி எனும் தமிழ்ப்பெயரால் வழங்கப்பட்டுள்ளது. திருவிளையாடல் புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு, பெரிய புராணம் என பல தமிழ் இலக்கியங்களில் பொருநை நதி எனும் பெயரே வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு அகழ்வாராய்ச்சியாளர்களும், தமிழறிஞர்களும் இதனை உறுதி செய்துள்ளனர். தாமிரபரணி என்பது வடமொழிச்சொல் அதற்கு மாற்றாக தூய தமிழ் பெயரான பொருநை நதி என 
மாற்றம் செய்யக் கோரி தமிழக தலைமைச் செயலருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே  தாமிரபரணியின் பெயரையும் பொருநை நதி என பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன்,  சத்தியநாராயண பிரசாத் அமர்வு, இந்த வழக்கு முக்கியமானது என குறிப்பிட்டு, அரசுத்தரப்பில் மொழியியல் நிபுணர்களின் கருத்துக்களையும் கேட்டு, வழக்கு குறித்து உரிய ஆவணங்களுடன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

 


மற்றொரு வழக்கு

மதுரை மாநகர் பகுதியில் விதி மீறி இயக்கிய ஆட்டோக்களிடம்  2 கோடி ரூபாய் அபராதம் வசூலித்ததாக உயர் நீதிமன்றத்தில் மதுரை காவல்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

மதுரை மாவட்ட மினி பஸ் உரிமையா ளர்கள் சங்கம் சார்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதனால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். பல நேரங்களில் விபத்து களும் ஏற்படுகின்றன. எனவே, இவற்றை தவிர்க்க ஆட்டோவில் பயணிகளை ஏற்றி, இறக்க தனி இடம் ஒதுக்கித் தருமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்  விசாரணைக்கு வந்தது. மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில்  விதி முறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது 2013 முதல் 17 வரை அதிக ஆள் ஏற்றியதாக 27751 மீட்டர் இல்லாமல் இயக்கியதாக 10286 ஆட்டோ சீட் மாற்றி அமைத்து இயக்கியதாக 2354  மேலும் பல்வேறு விதிகளை மீறியது என  மொத்தம் 156468 வழக்கு  பதிவ பதியப்பட்டது. இதில் அபராத தொகையாக 2 கோடி ருபாய்  வசூலிக்கப்பட்டுள்ளது .மேலும் மதுரை மாநகர் முழுவதும் 113 ஆட்டோ நிறுத்தும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது முறையான அனுமதி உடன் 1911 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது என்றும் தொடர்ந்து விதிமுறைகளை மீறும் ஆட்டோக்களை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் வட்டார போக்குவரத்து சார்பில் கடந்த 2013 முதல் 2017ம் ஆண்டு வரையில் விதிமீறியது  தொடர்பாக 1,412 ஆட்டோக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதில், வழக்கு பதியப்பட்ட 694 ஆட் டோக்களின் பெர்மிட் ரத்து செய்யப்பட்டது. 813 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதமாக ரூ.9 லட்சத்து 26 ஆயரத்து 850 வசூலிக்கப்பட்டது. பயணிகளின் சிரமமின்றி பயணம் செய்யவும், விதிமீறலை கட்டுப்படுத்தவும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்ப டுகிறது என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து  வைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget