மேலும் அறிய

தேனி:  வரதட்சணை பிரச்சினை: மருமகளையும் குழந்தையையும் எரித்துக் கொன்ற மாமனார்!

வரதட்சனை கேட்டு மருமகள் மற்றும் 2 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்த மாமனார் கைது. கணவன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன் பட்டி எனும் கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவர் அப்பகுதியில் விவசாய கூலியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் அருண் பாண்டியன் வயது (29) இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சிவப்பிரியா வயது (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருந்தது. தனது பெற்றோருடன் அருண்பாண்டியன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். மாமனாரான பெரியகருப்பனுக்கும், சிவப்ரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  பெரியகருப்பன் தனது மகன் காதல் திருமணம் செய்து வந்ததற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததும், தனது மகன் எந்தவித வரதட்சனை இன்றி சிவப்ரியாவை திருமணம் செய்து விட்டதாக கூறி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வரதட்சனை கேட்டு பெரியகருப்பன் சிவப்பிரியா உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் . அப்போது வீட்டில் இருந்த அருண்பாண்டியன் தந்தையையும் தனது மனைவியையும் சமாதானம் செய்தார். பின்னர் அவர் அந்த பகுதியில் உள்ள உணவு விடுதியில் உணவு வாங்குவதற்கு சென்றுள்ளார். 


தேனி:  வரதட்சணை பிரச்சினை: மருமகளையும் குழந்தையையும் எரித்துக் கொன்ற மாமனார்!

அப்பொழுது பெரியகருப்பன் சிவப்ரியாவுடன் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதில் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பெரியகருப்பன் வீட்டில் தோட்டத்தில் பூச்சி மருந்து இயந்திரத்தை இயக்குவதற்கு கேனில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மருமகள் மீது ஊற்றியுள்ளார். இதுமட்டுமின்றி கோபத்தில் அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவரது பேரன் யாகித் மீதும் அவர் பெட்ரோலை ஊற்றியுள்ளார். மருமகள் , குழந்தை  என்றும் பாராமல் தீவைத்து கொளுத்தியுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் சிவப்பிரியா குழந்தை ஆகியோர் மீது தீப்பற்றி எரிந்து உள்ளது. வேதனை தாங்க முடியாமல் இரண்டு பேரும் அலரி உள்ளனர். தீ வைத்து விட்டு பெரியகருப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையில் சிவப்பிரியா மற்றும் அவருடைய குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அவர்கள் மீது எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த அருண்பாண்டியன் தனது மனைவியையும் மகளையும் பார்த்து கதறியுள்ளார். உடல் கருகி தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிவப்பிரியா குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் கொண்டு செல்லும் வழியில் யாகித் பரிதாபமாக உயிர் இழந்தார். சிவப்பிரியா மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .


தேனி:  வரதட்சணை பிரச்சினை: மருமகளையும் குழந்தையையும் எரித்துக் கொன்ற மாமனார்!

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த பெரியகருப்பனை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவப்ரியாவுடம் போலீசார் கொடுத்த வாக்குமூலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தன்னிடம் வரதட்சணை கேட்டு மாமனார், மாமியார் ,கணவர் அருண்பாண்டியன் அவரது சகோதரி கனிமொழி ஆகியோர் தொடர்ந்து தன்னை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அருள் பாண்டியன் உட்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர். வரதட்சனைக்காக சிறு குழந்தை என்று பாராமல் தீ வைத்து கொளுத்திய  சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Perarivalan Case Updates LIVE : எங்களின் 31 ஆண்டுகால போராட்டத்தை நீங்கள் அறிவீர்கள் - அற்புதம்மாள்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget