மேலும் அறிய

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 68% பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன - ஆட்சியர் தகவல்

’’முதல் தவணை தடுப்பூசி  1127069 பேருக்கும்,  இரண்டாம் தவணை தடுப்பூசி 310871 பேருக்கும் ஆக மொத்தம் 1437940 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது’’

கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்த நிலையில், பல்வேறு கட்டங்களுக்கு பிறகு கொரோனா வைரஸ்சின் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இன்னிலையில் கடந்த இரண்டு மாதங்களாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்ற மாதம்  ஆரம்பத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு இலக்கமாக இருந்து மாத இறுதியில் இரண்டு இலக்கமாக மாறியது. அக்டோபர் மாதம் தொடங்கி ஒரு வாரம் நிறைவந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 68% பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன - ஆட்சியர் தகவல்

கொரோனா வைரஸ்சிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவது குறித்தும் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வுகள் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொது மக்களின் வசதிக்காக மாவட்டங்களில் பல்வேறு நகராட்சிகள், ஊராட்சி மன்றங்கள், பேருராட்சி அலுவலகங்கள் மூலமாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும்  இதுவரை மாவட்டந்தோறும் 4 கட்டங்களாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.


திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 68% பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன - ஆட்சியர் தகவல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி, எரியோடு பேரூராட்சி மற்றும் 18 ஊராட்சிகளில் 100 சதவீத தடுப்பூசி இலக்கு எட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளார். இதுதொடா்பாக அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது, 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் நகராட்சி, எரியோடு பேரூராட்சி, திருக்கூா்ணம், தோளிப்பட்டி, குத்திலுப்பை, வலையப்பட்டி, காமனூா், கே.சி.பட்டி, பெரியூா், பாச்சலூா், கும்பரையூா், பூலத்தூா், தாண்டிக்குடி, அடுக்கம், பூண்டி, அக்கரைப்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, சிங்காரக்கோட்டை, வேலாயுதம்பாளையம், அம்மாபட்டி ஊராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 68% பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன - ஆட்சியர் தகவல்

எனவும் திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் இலக்கை அடைவதற்காக 898 இடங்களில் நடைபெறும் தடுப்பூசி சிறப்பு முகாம்களின் வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். திண்டுக்கல் சுகாதாரம் மாவட்டம் மற்றும் பழனி சுகாதார மாவட்டங்கள் இரண்டும் சேர்ந்து  முதல் தவணை தடுப்பூசி 11,27,069 பேருக்கும்,  இரண்டாம் தவணை தடுப்பூசி 3,10,871 பேருக்கும் ஆக மொத்தம் 14,37,940 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது சதவிகித அடிப்படையில் 69% ஆகும் என தெரிவித்துள்ளார். 

Gold-Silver Price, 07 October: பெட்ரோல் டீசலோடு போட்டி போடும் தங்கம், வெள்ளி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Embed widget