மேலும் அறிய

Crime: தொழிலாளி வழிமறித்து அடித்துக்கொலை; 7 பேர் கொண்ட கும்பல் கைது - போலீசிடம் சிக்கியது எப்படி?

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த உண்டார்பட்டி அருகே அருகே விவசாயியை வழிமறித்து அடித்துக்கொன்ற வழக்கில் 7 பேர் கும்பல் சிக்கியது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த உண்டார்பட்டி அருகே உள்ள பிறகரை ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோசுவா வயது 28. விவசாயி. இவருக்கு கிருஷ்டி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கிருஷ்டியின் தாய் மேரி (50). இவர் திண்டுக்கல் முத்தழகுபட்டியில் தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேரியிடம் ஒரு கும்பல் தகராறு செய்தது. அப்போது அவர் வசிக்கும் வீடு, புறம்போக்கு இடத்தில் உள்ளதாகவும், அதனால் தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கூறி மிரட்டியதுடன், அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றது. இதுகுறித்து மேரி, தனது மருமகன் எட்வின் ஜோசுவாவிடம் கூறினார். இதையடுத்து அவர், அந்த கும்பலை தொடர்பு கொண்டு தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

Flight Cancelled: சென்னை முதல் அந்தமான் வரை செல்லும் விமானம் ரத்து.. விமான நிலையத்தில் பயணிகள் வாக்குவாதம்..


Crime: தொழிலாளி வழிமறித்து அடித்துக்கொலை; 7 பேர் கொண்ட கும்பல் கைது - போலீசிடம் சிக்கியது எப்படி?

அடித்துக்கொலை:

அதன்பிறகு தொடர்ந்து சில நாட்களாக அந்த கும்பலை சேர்ந்த நபர்களை எட்வின் ஜோசுவா செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி இரவு எட்வின் ஜோசுவா தாடிக்கொம்பில் இருந்து உண்டார்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரை வழிமறித்து ஆட்டோவில் கடத்தி சென்றனர். உண்டார்பட்டி அருகே சந்தன வர்த்தினி ஆற்றுப்பாலம் அருகே அவரை கொண்டு சென்று உருட்டுக்கட்டையால் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது.

Cheteshwar Pujara: தடுப்புச்சுவர் உடைக்கப்படுகிறதா? இந்திய அணியில் நீக்கப்பட்ட சோகம்.. துலீப் ட்ராபிக்கு தயாரான புஜாரா...!


Crime: தொழிலாளி வழிமறித்து அடித்துக்கொலை; 7 பேர் கொண்ட கும்பல் கைது - போலீசிடம் சிக்கியது எப்படி?

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிஓடிவிட்டது. இதில் படுகாயம் அடைந்த எட்வின் ஜோசுவா உயிருக்கு போராடினார். இதற்கிடையே அந்த வழியாக வந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எட்வின் ஜோசுவாவை கொன்ற கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ECR Accident: பரபரப்பு.. விழுப்புரம், மரக்காணம் ஈசிஆரில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து...10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

சிக்கிய கும்பல்:

இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், எட்வின் ஜோசுவாவை கொலை செய்த கும்பலை சேர்ந்தவர்கள், திண்டுக்கல் முத்தழகுப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த அலெக்ஸ்ராஜ் (வயது 25), எடிசன்ராஜ் (24), ரிச்சர்ட் சச்சின் (25), அமல்ராஜ் (55), முருகபவனத்தை சேர்ந்த பொன் அர்ஜூன் (22), மாரம்பாடி பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்த ஜான்சன் (24), திண்டுக்கல் லயன்தெருவை சேர்ந்த அரவிந்தன் (26) என்பது தெரியவந்தது.

இவர்கள் 7 பேரும் மாரம்பாடி அருகே உள்ள ஒரு குளத்தில் பதுங்கியிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 7 பேரும் மாரம்பாடி பஸ் நிறுத்தத்துக்கு சென்று பஸ்சில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அங்கு வந்த தனிப்படை போலீசார், அவர்கள் 7 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திண்டுக்கல் சிறையில் 7 பேரும் அடைக்கப்பட்டனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget