மேலும் அறிய

Crime: தொழிலாளி வழிமறித்து அடித்துக்கொலை; 7 பேர் கொண்ட கும்பல் கைது - போலீசிடம் சிக்கியது எப்படி?

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த உண்டார்பட்டி அருகே அருகே விவசாயியை வழிமறித்து அடித்துக்கொன்ற வழக்கில் 7 பேர் கும்பல் சிக்கியது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த உண்டார்பட்டி அருகே உள்ள பிறகரை ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோசுவா வயது 28. விவசாயி. இவருக்கு கிருஷ்டி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கிருஷ்டியின் தாய் மேரி (50). இவர் திண்டுக்கல் முத்தழகுபட்டியில் தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேரியிடம் ஒரு கும்பல் தகராறு செய்தது. அப்போது அவர் வசிக்கும் வீடு, புறம்போக்கு இடத்தில் உள்ளதாகவும், அதனால் தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கூறி மிரட்டியதுடன், அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றது. இதுகுறித்து மேரி, தனது மருமகன் எட்வின் ஜோசுவாவிடம் கூறினார். இதையடுத்து அவர், அந்த கும்பலை தொடர்பு கொண்டு தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

Flight Cancelled: சென்னை முதல் அந்தமான் வரை செல்லும் விமானம் ரத்து.. விமான நிலையத்தில் பயணிகள் வாக்குவாதம்..


Crime: தொழிலாளி வழிமறித்து அடித்துக்கொலை; 7 பேர் கொண்ட கும்பல் கைது - போலீசிடம் சிக்கியது எப்படி?

அடித்துக்கொலை:

அதன்பிறகு தொடர்ந்து சில நாட்களாக அந்த கும்பலை சேர்ந்த நபர்களை எட்வின் ஜோசுவா செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி இரவு எட்வின் ஜோசுவா தாடிக்கொம்பில் இருந்து உண்டார்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரை வழிமறித்து ஆட்டோவில் கடத்தி சென்றனர். உண்டார்பட்டி அருகே சந்தன வர்த்தினி ஆற்றுப்பாலம் அருகே அவரை கொண்டு சென்று உருட்டுக்கட்டையால் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது.

Cheteshwar Pujara: தடுப்புச்சுவர் உடைக்கப்படுகிறதா? இந்திய அணியில் நீக்கப்பட்ட சோகம்.. துலீப் ட்ராபிக்கு தயாரான புஜாரா...!


Crime: தொழிலாளி வழிமறித்து அடித்துக்கொலை; 7 பேர் கொண்ட கும்பல் கைது - போலீசிடம் சிக்கியது எப்படி?

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிஓடிவிட்டது. இதில் படுகாயம் அடைந்த எட்வின் ஜோசுவா உயிருக்கு போராடினார். இதற்கிடையே அந்த வழியாக வந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எட்வின் ஜோசுவாவை கொன்ற கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ECR Accident: பரபரப்பு.. விழுப்புரம், மரக்காணம் ஈசிஆரில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து...10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

சிக்கிய கும்பல்:

இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், எட்வின் ஜோசுவாவை கொலை செய்த கும்பலை சேர்ந்தவர்கள், திண்டுக்கல் முத்தழகுப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த அலெக்ஸ்ராஜ் (வயது 25), எடிசன்ராஜ் (24), ரிச்சர்ட் சச்சின் (25), அமல்ராஜ் (55), முருகபவனத்தை சேர்ந்த பொன் அர்ஜூன் (22), மாரம்பாடி பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்த ஜான்சன் (24), திண்டுக்கல் லயன்தெருவை சேர்ந்த அரவிந்தன் (26) என்பது தெரியவந்தது.

இவர்கள் 7 பேரும் மாரம்பாடி அருகே உள்ள ஒரு குளத்தில் பதுங்கியிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 7 பேரும் மாரம்பாடி பஸ் நிறுத்தத்துக்கு சென்று பஸ்சில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அங்கு வந்த தனிப்படை போலீசார், அவர்கள் 7 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திண்டுக்கல் சிறையில் 7 பேரும் அடைக்கப்பட்டனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget