மேலும் அறிய

EPS: அ.ம.மு.க. நிர்வாகி மீதான தாக்குதல்; அவனியாபுரம் காவல்நிலையத்தில் இ.பி.எஸ். மீது வழக்குப்பதிவு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு வழக்குப்பதிவு செய்து அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமானவர் எடப்பாடி பழனிசாமி. மதுரை, சிவகங்கையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று காலை மதுரை வந்தார்.

எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு:

அவர் விமானத்தில் இருந்து விமான நிலையம் வரை டாக்ஸிங் பேருந்து எனப்படும் விமான பயணிகள் செல்லும் பேருந்தில் வந்தபோது ராஜேஸ்வரன் என்ற பயணி எடப்பாடி பழனிசாமி மீது அவதூறாக பேசி வீடிேயோ பதிவிட்டார். இதையடுத்து, விமான நிலையத்தின் வெளியில் காத்திருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ராஜேஸ்வரன் மீது தாக்குதல் நடத்தினர். 

இந்த நிலையில், தன்னை தாக்கியதாக ராஜேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு வழக்குப்பதிவு செய்து அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்தில் பயணித்த பயணி:

எடப்பாடி பழனிசாமி வந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் அவருடன் பயணித்தனர். விமானம் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, எடப்பாடி பழனிசாமி உள்பட பலரும் டாக்ஸிங் பேருந்து எனப்படும் விமானத்தில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.


EPS: அ.ம.மு.க. நிர்வாகி மீதான தாக்குதல்; அவனியாபுரம் காவல்நிலையத்தில் இ.பி.எஸ். மீது வழக்குப்பதிவு

துரோகத்தின் அடையாளம்:

அப்போது, அவருடன் பயணித்த பயணி ஒருவர் தன்னுடைய செல்போன் மூலமாக ஃபேஸ்புக்கில் லைவ் சென்றார். அப்போது, அவர் தன்னுடைய லைவ்-வில் பேசியதாவது,” இப்போது நம்முடன் நமது எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அண்ணன் எடப்பாடியார், துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர், 10.5 சதவீதத்தை தென்நாட்டு மக்களுக்கு எதிராக அளித்தவர்” என்று பேசினார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமியுடன் பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் அந்த நபரிடம் இருந்து செல்போனை பறித்தார். இதனால், அந்த பேருந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட  விசாரனையில் அவர் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக. மதுரை விமான நிலையத்திற்கு வந்தவர் என்றும், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வையாபுரிபட்டியைச் சேர்ந்த யோகேஸ்வரன் மகன் ராஜேஸ்வரன் என்பதும் தெரியவந்தது. பின்னர், ராஜேஸ்வரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

எடப்பாடி பழனிசாமி வந்த பேருந்திலே அவருக்கு எதிராக சசிகலா ஆதரவாளர் ஒருவர் ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகிய மூன்று  தரப்பு நெருக்கடிகளையும், தேர்தல் தோல்வி எதிரொலிகளையும் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்த சூழலில், மதுரை சென்ற அவருக்கு விமான நிலைய பேருந்திலே எதிர்ப்புக் குரல் எழும்பியது குறிப்பிடத்தக்கது.



EPS: அ.ம.மு.க. நிர்வாகி மீதான தாக்குதல்; அவனியாபுரம் காவல்நிலையத்தில் இ.பி.எஸ். மீது வழக்குப்பதிவு

 

 இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - EPS: பேருந்தில் பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி.. துரோகத்தின் அடையாளம் என கூச்சலிட்ட சக பயணி...! நடந்தது என்ன?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget