மேலும் அறிய

பழனியில் கஞ்சா புகைப்பது போன்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட 6 பேர் கைது

சிறுவர் பூங்காவில் இளைஞர்கள் கஞ்சா குடிப்பது போலவும் ,கஞ்சா போதையில் விழுந்து கிடப்பது போல இன்ஸ்டாகிராமில் ரீல்ல் செய்து வெளியிட்டுள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பழனி கோவிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்காவில் இளைஞர்கள் கஞ்சா குடிப்பது போலவும் ,கஞ்சா போதையில் விழுந்து கிடப்பது போல இன்ஸ்டாகிராமில் ரீல்ல் செய்து வெளியிட்டுள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து ரீல்ஸ் செய்த இளைஞர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


பழனியில் கஞ்சா புகைப்பது போன்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட 6 பேர் கைது

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யும் பழக்கம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் வயது வரம்பில்லாமல் இருந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் உட்பட தங்களது விளம்பரத்திற்காக ரீல்ஸ் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அந்த வகையில் 2k கிட்ஸ்  சமூக வளைதலங்களில் ரீல்ஸ் செய்வது அதிகம். ரீல்ஸ் செய்வது சிலரின் திறமையை வெளிக்கொண்டு வந்தாலும் பலரது ரீல்ஸ் வீடியோ முகம் சுழிக்க வைக்கும் சூழலே ஏற்படுத்தியுள்ளது.


பழனியில் கஞ்சா புகைப்பது போன்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட 6 பேர் கைது

அப்படி திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு உட்பட்டது தேவஸ்தான சிறுவர் பூங்கா.  பழனி-கொடைக்கானல் சாலை அருகே உள்ள இந்த சிறுவர் பூங்காவில் மூன்று நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சில இளைஞர்கள் கையில்  கஞ்சாவை வைத்து தேய்ப்பதும் பின்னர் கஞ்சாவை குடித்துவிட்டு பின்னர் கஞ்சா போதையில் சிறுவர் பூங்காவில் ஆங்காங்கே கிடப்பது போலவும் சித்தரித்தும்,  இளைஞர்கள்  அவர்களின் நண்பரை தூக்கிச் செல்வது போலவும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீட்டு அந்த வீடியோ சமூக வளைதலங்களில் வைரலானது. இந்த  வீடியோ வைரலானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


பழனியில் கஞ்சா புகைப்பது போன்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட 6 பேர் கைது

இந்த ரீல்ஸ் தொடர்பான வீடியோ குறித்து  பழனி நகர போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்த சூழலில் வீடியோ வெளியிட்ட நபர்களையும் போலீசார் தேடி வந்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கஞ்சா வியாபாரியையும் போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில்  பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார், மகாபிரபு,கார்த்தி, பாலசுப்ரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகிய 6 நபர்களை போலீஸார் கைது செய்தனர்.


பழனியில் கஞ்சா புகைப்பது போன்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட 6 பேர் கைது

அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கஞ்சா புகைக்க பயன்படுத்திய Bong(புகையிலை உறிஞ்சி) கைப்பற்றப்பட்டு வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா புகைக்கும் ரீல்ஸ் வீடியோ சம்பந்தமாக பாலசமுத்திரத்தை சோந்த மணிகண்டன் , மதி  மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய அடுத்து இணையத்தில் பாலசமுத்திரத்தை சோந்த பாஸ்கர் மற்றும் முத்துராஜா ஆகியோர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை தொடக்கம்: 3 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்!
மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை தொடக்கம்: 3 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்!
தேனியில் இன்று (03-06-26) மின் தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு விவரம் இதோ!
தேனியில் இன்று (03-06-26) மின் தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு விவரம் இதோ!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான முதல் தமிழி நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான முதல் தமிழி நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
தொண்டர்களுக்கு மதிப்பளித்து அதிமுக வலிமை பெற தலைவர்கள் செயல்பட வேண்டும் - செல்லூர் ராஜு !
தொண்டர்களுக்கு மதிப்பளித்து அதிமுக வலிமை பெற தலைவர்கள் செயல்பட வேண்டும் - செல்லூர் ராஜு !

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ள ஐஐடியில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ள ஐஐடியில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
Embed widget