மேலும் அறிய

திண்டுக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறியதாக 3 லட்சம் வாகன ஓட்டிகளிடம் இருந்து 6.87 கோடி அபராதம்

போக்குவரத்து விதிகளை மீறிய 2,97,90 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 6 கோடியே 87 லட்சத்து 37 ஆயிரத்து 900 அபராதம் வசூல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்குகள், குண்டர் தடுப்புச்சட்ட நடவடிக்கைகள், சாலை போக்குவரத்து விதிகள் மீறல் உள்ளிட்ட வழக்குகள் குறித்த புள்ளிவிவரங்களையும் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றத்தடுப்பு நடவடிக்கைகளையும் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார். அதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சட்டம் ,ஒழுங்கை பாதுகாக்க குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்  மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.


திண்டுக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறியதாக 3 லட்சம் வாகன ஓட்டிகளிடம் இருந்து 6.87 கோடி அபராதம்

அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை வழக்குகளில் 86 பேரும், 12 பாலியல் குற்றவாளிகள், 10 கொள்ளையர்கள், 17 போதை பொருள் கடத்தல்காரர்கள் என மொத்தம் 125 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் 2,554 பேர் மீது குற்ற விசாரணை முறை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் 1,800 பேர் ஆர்.டி.ஓ. முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டது. அதை மீறி குற்றத்தில் ஈடுபட்ட 20 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சாலை விதிகளை மீறிய 8,99,78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறியதாக 3 லட்சம் வாகன ஓட்டிகளிடம் இருந்து 6.87 கோடி அபராதம்
பள்ளி சமையலறை அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு.. கொலையா? போராடும் கிராமம்

அதில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 732 பேர், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 4,61,128 பேர் மீது வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதோடு மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களின், ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய 2,97,90 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 6 கோடியே 87 லட்சத்து 37 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் 226 கஞ்சா கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்மூலம் மாவட்டம் முழுவது 894 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


திண்டுக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறியதாக 3 லட்சம் வாகன ஓட்டிகளிடம் இருந்து 6.87 கோடி அபராதம்
’’கேரளாவை சேர்ந்த 5 பேருக்கு பட்டா வழங்கி தனியார் சோலார் மின் பவர் பிளான்ட் போட ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பது விசாரணை மூலம் அம்பலம்’

புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தல் தொடர்பாக 807 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 833 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.80 லட்சத்து 87 ஆயிரத்து 927 மதிப்பில் 8 டன் 732 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதவிர மாவட்டம் முழுவதும் காணாமல் போன 298 பேரில் 274 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய 284 பேர் கைது செய்யப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

தலைப்பு செய்திகள்

பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால் திமுக அதல பாதாளத்திற்கு செல்லும் - எம்.எல்.ஏ., முஸ்தபா சாடல் !
பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால் திமுக அதல பாதாளத்திற்கு செல்லும் - எம்.எல்.ஏ., முஸ்தபா சாடல் !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget