மேலும் அறிய

திண்டுக்கல்லில் நிதிநிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 116 பவுன் நகைகள் மீட்பு

நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்தவர்கள் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த ஜாகீர் உசேன் (35), நவாஸ் (37) என்பது தெரியவந்தது

திண்டுக்கல் கிழக்கு ரத வீதி, ஜான் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கண்ணன் (54). நிதி நிறுவன அதிபர். இவருடைய மனைவி கவிதா (45). இவர்கள் கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி இரவு தங்களது வீட்டில் தூங்கி கொண்டிருந்த அப்போது நள்ளிரவில் கண்ணன் வீட்டின் மொட்டை மாடிக்கு 2 மர்மநபர்கள் ஏறினர். பின்னர் அவர்கள் அங்கிருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டுக்குள் இருந்த பீரோவை திறந்து, அதில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகைகளை  கொள்ளையடித்து சென்றனர்.

திண்டுக்கல்லில் நிதிநிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 116 பவுன் நகைகள் மீட்பு
 
இதற்கிடையே மறுநாள் காலையில் கவிதா எழுந்து பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் இருப்பதையும், அதிலிருந்த 145 பவுன் நகைகள் கொள்ளை போனதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அவர், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் மகேஷ் தலைமையிலான போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

திண்டுக்கல்லில் நிதிநிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 116 பவுன் நகைகள் மீட்பு
 
இந்தநிலையில் நிதிநிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க, திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலிசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்தவர்கள் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த ஜாகீர் உசேன் (35), நவாஸ் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து புளியங்குடி சென்ற தனிப்படை போலீசார், அங்கு பதுங்கியிருந்த 2 பேரையும் கைது செய்தனர்.

திண்டுக்கல்லில் நிதிநிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 116 பவுன் நகைகள் மீட்பு
 
பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்த நகைகளில் 116 பவுன் நகைகளை அடகு வைத்ததும், மீதமுள்ள நகைகளை விற்று சொத்துகள் வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கூறிய விவரங்களின் அடிப்படையில் அடகு வைக்கப்பட்டு இருந்த 116 பவுன் நகைகள் மற்றும் சொத்துகளுக்கான ஆவணங்களை போலீசார் மீட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Embed widget