மேலும் அறிய

Pugar Petti : அச்சுறுத்தும் பேருந்துகளில் ஹாரன் ஒலி.. காஞ்சிபுரம் வாகன ஓட்டிகள் அவதி.. நடவடிக்கை பாயுமா?

" காஞ்சிபுரத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவு ஹாரன் ஒலி எழுப்புவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள் "  

காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாநகரம் சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பணி நிமித்தமாக அதிகளவு பொதுமக்கள் வந்து செல்லும் நகரமாகவும், கோயில்கள் நகரமாகவும், பட்டு நகரமாகவும் இருப்பதால் நாள் தோறும் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். நாள்தோறும் 80,000-க்கும் மேற்பட்ட மக்களும், சுபமுகூர்த்த நாள் லிட்டர் நாட்களில் ஒரு லட்சம் வரை பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய நகரமாக இருந்து வருகிறது. 


Pugar Petti : அச்சுறுத்தும் பேருந்துகளில் ஹாரன் ஒலி.. காஞ்சிபுரம் வாகன ஓட்டிகள் அவதி.. நடவடிக்கை பாயுமா?

அரசு மற்றும் தனியார் பேருந்துகள்

பொதுமக்கள் வருகைக்கு ஏற்ப சாலைகள் விரிவு செய்யப்படாதது, உள்ளிட்ட காரணங்களால் எப்போதும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி வருகிறது. இது போக அதிக அளவு தனியார் பேருந்துகளும் காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி, திண்டிவனம், பாண்டிச்சேரி, செஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, திருப்பதி, திருத்தணி, அரக்கோணம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.   


Pugar Petti : அச்சுறுத்தும் பேருந்துகளில் ஹாரன் ஒலி.. காஞ்சிபுரம் வாகன ஓட்டிகள் அவதி.. நடவடிக்கை பாயுமா?

அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள்.

இவ்வாறு இயக்கப்படும் பல தனியார் பேருந்துகள் மற்றும் ஒரு சில அரசு பேருந்துகளில், காதுகளை கிழிக்கும் வகையில் அதிக ஒல் எழுப்பக்கூடிய ஹாரன்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். அதுவும் ஒரு சில ஹாரன்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வாகனங்கள் செல்லும்போது பயன்படுத்தக் கூடிய வகையில் நகர் முழுவதும் இருக்கும் ஒரு கிலோமீட்டரில் தொடங்கி இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு தொடர்ந்து ஒலி எழுப்பு கொண்டே செல்வதால், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.


Pugar Petti : அச்சுறுத்தும் பேருந்துகளில் ஹாரன் ஒலி.. காஞ்சிபுரம் வாகன ஓட்டிகள் அவதி.. நடவடிக்கை பாயுமா?

நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தனியார் பேருந்துகளை போல் ஒரு சில அரசு பேருந்துகளும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதால் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள், அச்சத்துடன் வாகனத்தை ஓட்ட வேண்டிய சூழல் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக இதுகுறித்து போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?

கவலையே வேண்டாம். 

சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை, நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.

 

நீங்கள் ABP NADU-ன் 9566546083 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Embed widget