மேலும் அறிய

Breakfast Scheme : ”முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் சாதனை படைக்கும் காஞ்சி” உற்சாகமாக பள்ளிக்கு வரும் மாணவர்கள்..!

Morning Breakfast Scheme : காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் வாயிலாக 527 பள்ளிகளில் 34,233 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திய பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் ஒரு புரட்சி திட்டம் என  எதிர்க்கட்சிகளே பாரட்டி வரும் நிலையில், இத்திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் சாதனை படைத்து வருகிறது.Breakfast Scheme : ”முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் சாதனை படைக்கும் காஞ்சி” உற்சாகமாக பள்ளிக்கு வரும் மாணவர்கள்..!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும், பள்ளிகளில் குழந்தைகளின் வருகையை அதிகரிக்கவும் / தக்க வைக்கவும், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் இத்திட்டம் முதல்வரின் நேரடி பார்வையில் தமிழ்நாடு அரசால்செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் காலை உணவுத் திட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை சிற்றுண்டியானது, திங்கட்கிழமையில் ரவை உப்புமா, காய்கறி சாம்பாரும், செவ்வாய் கிழமையில்  கோதுமை ரவை கிச்சடி, காய்கறி சாம்பாரும்,  புதன் கிழமையில் வெண்பொங்கல், காய்கறி சாம்பாரும், வியாழக்கிழமையில் அரிசி உப்புமா, காய்கறி சாம்பாரும், வெள்ளிக்கிழமை ரவை காய்கறி கிச்சடி காய்கறி சாம்பாரும்  வழங்கப்படுகிறது.

காஞ்சிபுரம் ஒன்றிய அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 98 பள்ளிகளில்  7819 மாணவ மற்றும் மாணவியர்களும்,  திருப்பெரும்புதூர் ஒன்றியத்தில் 105 பள்ளிகளில்  6442  மாணவ மற்றும் மாணவியர்களும், குன்றத்தூர் ஒன்றியத்தில் 90 பள்ளிகளில்  9643  மாணவ மற்றும் மாணவியர்களும்,   உத்திரமேரூர் ஒன்றியத்தில் 123 பள்ளிகளில் 5372  மாணவ மற்றும் மாணவியர்களும் மற்றும் வாலாஜாபாத் ஒன்றியத்தில் 111 பள்ளிகளில்  4957  மாணவ மற்றும் மாணவியர்களும்   இத்திட்டத்தினால் பயனடைந்து வருகின்றனர்.     

" 34,233 மாணாக்கர்கள் பயன் "       

தமிழ்நாட்டில் நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 31,000 அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரைபயிலும் 18.5 இலட்சம் மாணாக்கர்கள் இத்திட்டத்தினால் பயனடைகிறார்கள். புரட்சிகரமான இத்திட்டத்தினை ஏனைய பிற மாநிலங்கள் மட்டுமின்றி அயல்நாடு கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 527 பள்ளிகளில் 34,233 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர். 

நிம்மதியாக வேலைக்கு சென்று வர முடிகிறது

இதுகுறித்து காஞ்சிபுரம் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த லோகநாயகி தெரிவித்ததாவது : என் குழந்தைகள் ஆசிரியர் நகர் பள்ளியில் பயின்று வருகின்றனர். நானும், என் கணவரும் காலையில் வேலைக்கு செல்வதால் டிபன் செய்வதற்கு முடியாத சூழ்நிலை ஏற்படும். முதலமைச்சர் அறிமுகப்படுத்திய காலை உணவுத்திட்டத்தினால் என் பிள்ளைகள் பள்ளியில் காலை உணவு சாப்பிடுவதால் நாங்கள் நிம்மதியாக வேலைக்கு சென்று வர முடிகிறது. பெண்களுக்கு காலையில் உணவு செய்து குழந்தைகளை பள்ளி அனுப்புவதும் பிறகு நாங்கள் வேலைக்கு செல்வதும் மிகவும் சிரமமாக இருந்த சூழ்நிலையில், காலை உணவு திட்டத்தினால் பள்ளியில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவது எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளன. தினமும் மாணவர்களுக்கு சத்துள்ள உணவாக ரவா உப்புமா, மக்காச்சோளம் ரவா காய்கறி கிச்சடி போன்ற சத்தான உணவுகள் தரப்படுகின்றன. இத்திட்டத்தினை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்    என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget